தேவதூதன் Phoenix, Arizona, USA 47-1102 1கனடா மற்றும் அமெரிக்கா ஐக்கிய நாடுகளின் பெரிய பகுதி அரிசோனாவிலுள்ள ஃபோனிக்ஸ் என்னும் பகுதியில், இப்போது நான் இந்த மத்தியான வேளையில் இருப்பது போல வேறு எந்த இடத்தையும் நான் அறிந்ததில்லை. இப்போதும் நான் கர்த்தரின் நாமத்தில், வியாதியஸ்தருக்காக ஜெபம் பண்ணும்படியாக வந்திருக்கிறேன். இப்போது அடுத்து வரக்கூடிய எட்டு ஞாயிற்றுக்கிழமைகளில் அநேக வல்லமையுள்ள அற்புதங்கள் நிகழ்த்தப்படும் என்று விசுவாசித்துக் கூறுகிறேன். இது மகிமை யான கூட்டங்களில் ஒன்றாயிருக்கும் என்றும் பழமையான பாணியில் எழுப்புதல் இருக்கும் என்றும் அதுதானே இந்த ஃபோனிக்ஸில் ஆரம்பிக்கப்பட்டு, அதற்குக் கொடுக்கப்படும். நம்முடைய எஜமான் தாமே, காட்சியில் காணப்படும் வரை முடியப்போவதில்லை, என்றும் நான் நம்புகிறேன். இன்று காலை நான் படுக்கையை விட்டு எழுந்து ஜன்னலருகே சென்று, அதன் மேலிருந்த திரைச்சீலையை உயர்த்தி, ஒட்டக முதுகு மலையை நோக்கிப் பார்த்தேன். இங்கிருந்தும் அந்த மலைக்கு இடையே பசுமையான பனைமரங்கள் காணப்பட்டன. அப்போதுதானே சூரியன் உதித்து, அந்த மலையின் மேல் பிரகாசித்துக்கொண்டிருந்தது. இத்தகைய அருமையான இடத்தில் வாழ அரிசோனாவின் ஃபோனிக்ஸ் மக்கள் எவ்வளவு நன்றியுடையவர்களாய் இருக்கவேண்டும் என்று நான் நினைத்தேன். அவர்கள் அரிசோனாவின் ஃபோனிக்ஸில் வசிப்பது பரலோகத்திற்கு அருகாமையில் இருப்பது போன்றுதான். அத்தகையச் சூழ்நிலையில் உள்ளது. அதை நான் விரும்புகிறேன். நான் உங்களோடு எட்டு வாரங்கள் அல்லது எட்டு ஞாயிறுகள் இங்கு இருப்பதற்கு நன்றியுடையவனாய் இருக்கிறேன். 2இந்த ஞாயிற்றுக்கிழமை, இதுவரை ஒருவேளை நான் சந்திக்காத அநேகர் இங்கே இருக்கலாம். உங்கள் ஒவ்வொருவருடனும் நேரத்தை செலவிடவும், உங்களோடு பேசவும், கைகுலுக்கவும், உரையாடவும் விரும்புகிறேன். பிற்பாடு அதை நான் செய்கிறேன். இந்த ஆராதனைகள் முடிந்த மாத்திரத்தில் அப்படியே கலிபோர்னியாவுக்குச் சென்று, அங்கிருந்து பிரிஸ்கோவிற்கும், வேன் கோவர், பிரிட்டிஷ் கொலம்பியாவிற்கும் சென்று செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்க வேண்டும். வேன்கோவரில் மகத்தான கூட்டங்களை எதிர்பார்க்கிறேன். ஏனெனில் கால்கரி கூட்டங்கள் அது என்னுடைய கடைசி ஆராதனை, கால்கரியில் நடந்த, என்னுடைய வாழ்க்கையில் நான் கண்டிராத அந்த மிகவும் வல்லமையுள்ள ஜெபக்கூட்டத்திற்கு, கர்த்தராகிய இயேசு வந்திருந்தார். அது கனடா முழுவதும் மிகவும் வல்லமையாக இருந்தது. ஏறக்குறைய அந்த கனடாவின் மக்களில் ... சிலர் இப்போது இங்கிருக்கின்றனர். அவர்கள் அங்கே ஆராதனை முடிந்தவுடன், இங்கே வருவார்கள். ஏனெனில் ஜெபவரிசையைப் பெற்றுக்கொள்ள முடியாத, நூற்றுக்கணக்கானவர்கள் இங்கே வருவார்கள். 3ஆனால், கனடா மக்கள் முப்பது முதல் ஐம்பது வருடங்கள் அமெரிக்காவை விட பிந்தி இருக்கிறார்கள். நாம் இப்பொழுது வாழும் துரிதமான வாழ்க்கை, அவர்களுக்குக் கிடைக்கவில்லை. அவர்கள் ஒருபோதும் அவசரப்பட்டவர்களாய் இருக்கவில்லை . அவர்கள் மிகவும் தாழ்மையும், இனிமையுமான மக்கள். சர்வ வல்லமையுள்ள தேவனுடைய வல்லமைக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். மேலும் அவர் தம்முடைய மகத்தான அருமையான வல்லமையை கனடா மக்களின் மத்தியில் நிச்சயமாக வெளிப்படுத்தினார். செவிடு, ஊமை, குருடு, புற்றுநோய், முடங்கள், சக்கர நாற்காலிகள், ஓ, எல்லாமுமே அங்கே நடந்தன. மேலும் அநேகமாயிரம் பேருக்கு ஜெபவரிசை கிடைக்காமல் போய்விட்டது. இது ஏற்கனவே வேன் கோவர் கூடுகையில் புகார் செய்யப்பட்டுள்ளது. மிகவும் சிறப்பாக நடைபெற்றவற்றில் ஒரு விஷயம் எனக்கு இந்த நேரத்தில் நினைவில் வருகிறது. அது ஒரு சிறுபையன் சக்கர நாற்காலியில், நான் இங்கு நிற்பது உண்மையாயிருப்பது போல, இந்தத் தூதனாகிய அவர் நான் உண்மையுள்ளவனாயிருந்து, ஜனங்களை விசுவாசிக்கும்படியாகச் செய்தால் அதற்கு முன்பாக ஒன்றுமே நிற்காது என எனக்கு வாக்களித்திருந்தார். ஆகவே, அவர்கள் அந்த ஜெபவரிசையில் முடமானவர் களைத் தவிர யாருமில்லாத அந்த இடத்தில், என்ன சம்பவிக்கும் என்று எதிர் பார்த்துக் கொண்டிருந்தார்கள். எனவே, அவர்கள் அந்தவிதமாக அதை ஒரு அற்புத வரிசையான ஜெபவரிசை உண்டாயிருக்கத்தக்கதாக முடவர்களைத் தவிர யாரும் இல்லாதபடிக்கு விட்டு விட்டு சுகமாக்குதலின் வரத்தினால் என்ன நடக்கக்கூடும் என்று காத்திருந்தார்கள். அது அற்புதங்களின் வரம் அல்ல, அது சுகமாகுதலின் வரம். அந்த மாதிரியான விதத்தில், என்ன சம்பவிக்கும் என்று அவர்கள் பார்க்க விரும்பினார்கள். 4முப்பது வயதுடைய ஒரு வாலிப மனிதன் அங்கிருந்தான். அவன் ஜெபக்கூட்டம் நடைபெறும் எல்லா வழிகளிலும் சாஸ்காடூன் முதல் எட்மண்ட்ட ன் முடிய கால்கரியிலும் தொடர்ந்து வந்தான். அவனுக்குப் பொருளாதாரக் குறைவு இருந்தது. அவனுடைய தாயார் அவனுக்கிருந்த சில சொத்துக்களை விற்றுவிட்டாள். இந்தப் பையனுக்கென செலவழிக்க ஒன்றும் இல்லாமல் வீட்டுக்குத் திரும்பிப் போக மட்டுமே பணம் இருந்தது. அவள் முடவர்களுக்கான ஒரு அற்புத வரிசை இருக்கப்போகிறது எனக் கேள்விப்பட்ட போது, தன்னுடைய திருமண மோதிரத்தை அடகுக் கடையில் வைத்து அந்தப் பையன் அற்புத வரிசையில் இருக்கும்படியாக செய்தாள். அந்தப் பையனை அங்கே இருக்க வைப்பதற்காக அந்தத் தாயார் அவளுடைய திருமண மோதிரத்தை அடகு வைத்திருக்கிறாள் என்பது என் காதுகளுக்கு வந்தது. அந்தத் தாயினுடைய திருமண மோதிரம் என்னுடைய தாய்க்கோ என்னுடைய மனைவிக்கோ, உங்களது மனைவிக்கோ எப்படி அர்த்தமுள்ளதாயிருக் கிறதோ அவ்வளவாய் அவளுக்கும் உள்ளது. அவளுக்கு அதிக அர்த்தமுள்ளதாயிருக்கிறது. நான் அறிய வந்ததெல்லாம் ஒருவேளை அவளுடைய கணவன் மரித்துப் போயிருக்கலாம். நல்லது, ஏதோ வழியிலே அவள் அதைத் திரும்பப் பெற்றுக் கொண்டு அவள் பணம் அவள் திரும்பப் பெறத்தக்கதாக நாங்கள் சமாளித்தோம். 5ஆனால் அந்த இரவு, எனது சிறிய சகோதரன் அவ்வரிசையில், இந்தப் பையனைக் கொண்டு வந்தான். அவன் மிகவும் விகாரமான முடமுள்ள மனிதனாக இதுவரையுள்ள அநேக வருடங்களில் நான் கண்டிராதவனாயிருந்தான். அவனது முன் கை அவனது கால்களிடம் தொங்கிக் கொண்டிருந்து. அவன் பார்ப்பதற்கு மிக, மிக, மோசமான உருவமாகக் காணப்பட்டான். எனக்கு முன்பு, ஒரு சிறிய ... (ஒலிநாடாவில் காலியிடம்-ஆசி) தேவனுடைய நியாயத்தீர்ப்பு ஒவ்வொரு வார்த்தைக்கும் நான் கணக்குக் கொடுக்க வேண்டும். நான் பேசிய ஒவ்வொரு வார்த்தைக்கும், நான் அதற்குப் பதில் அளிக்க வேண்டும். ஆனால், திடீரென்று வரம் வரக்கூடிய அதிர்வுகள் ஏற்படும். எனது இந்த ஒரு கரம், உண்மையாகவே சூடேறிற்று. மேலும் நான் எட்டு அல்லது ஒன்பது (அவ்வளவு கூட இருக்காது) வயதுடைய ஒரு சிறு குழந்தை இருந்தது. என் கரத்தை அச்சிறு குழந்தையின் தொடையின் மீது வைத்தேன். அப்போது ஏதோ ஒன்று கீழ்நோக்கி நகர்ந்தது. என் நண்பர்களே, தேவன் என்னுடைய நியாயதிபதியாய் இருக்கிறார், அவருக்கு முன்பாக நான் நின்று கொண்டிருக்கிறேன். நான்கு அங்குலம் குறைவாய் இருந்த அந்த குழந்தையின் கால் பூரணமானது. அவள் வேதாகமத்தை தன் தலையின் மீது வைத்துக் கொண்டு, மக்களின் முன்பு மேலும் கீழுமாக நடந்தாள். மிகவும் சரியாக எப்படி ஒருவர் நடக்க முடியுமோ அதுபோல, அப்படி நடந்தாள். ஒரு மணிநேர ஜெபம் அவளுக்காக ஏறெடுக்கப்பட்டு, அவள் குணமடைந்தாள். 6அடுத்ததாக இந்த முடமான பையன் முப்பத்தைந்து அல்லது நாற்பது நிமிடங்கள் அவனுக்காக ஜெபிக்கப்பட்ட பிற்பாடு கூட, எந்தவிதமான வித்தியாசத்தையும் என்னால் உணரமுடியவில்லை. உணருதல் என்பதற்கு நான் என்ன அர்த்தம் கொள்கிறேன் என்பதைப் பிற்பாடு உங்களுக்கு விளக்குகிறேன். அதற்குப் பிற்பாடு அந்த விடுதலை வந்தது. அவனைக் கட்டி வைத்திருந்த அந்த வல்லமை போய்விட்டது. அடுத்த நாள் காலையில் அந்தப் பையன் அவனாகவே சவரம் செய்து கொண்டான். அவனுடைய கரங்கள் கீழே இறங்கி இருந்தன. அவனாகவே அவன் சாப்பிடவோ, சவரம் செய்து கொள்ளவோ கூடாமல் இருந்தது. கட்டிடத்திற்குள்ளாக நடந்து, அவனுடைய சக்கர வண்டியைத் தரையினூடாக ஒரு முப்பது வருடத்தில் முதல் முறையாக மேலும் கீழுமாகத் தள்ளிக் கொண்டிருந்தான். அவன் என்னை சந்திக்க வேண்டியிருந்தது. அவனுக்கு ஒரு தந்தி கிடைத்திருந்தது. நாளைய தினம் வான்கூவரில் என்னை சந்தித்து வாழ்த்தி என்னுடைய கைகளைக் குலுக்குகிற முதல் நபராக இருப்பான். வெளியே நடந்து, அவனுடைய புகைப்படத்தை எடுத்துக் கொண்டு விமானத்தினிடத்தில் சக்கர நாற்காலியில் இருந்த அந்த நேரத்தில் என்னைச் சந்திக்க நடந்து வந்தான். ஓ, தேவன் இன்னும் தேவனாகவே இருக்கிறார். எனக்கு நேரமானது இருந்திருக்குமானால் நான் உங்களுக்குச் சொல்லட்டும்...ஆனால் நிச்சயமாக தேவன் சாட்சிகளின் மூலமும், பலவிதமான வழிகளிலும் உங்களுக்கு அதைத் தெரியப்படுத்துவார். 7இங்கு கனடா நாட்டு நண்பர்கள், எவரேனும் இருக்கிறீர்களா என்று வியக்கிறேன், யாராவது கனடாவிலிருந்து வந்திருக்கிறீர்களா? உங்கள் கரங்களை உயர்த்துவீர்களா? யாராவது ஒருவர் கனடாவிலிருந்து? ஆம். நான் ஒருவரைப் பார்க்கிறேன். கனடாவின் எந்தப் பகுதி சகோதரியே? க்யூபெக் அல்லது வின்னிபெக் என்னுமிடமா? நீங்கள் வின்னிபெக் கூட்டத்தில் இருந்தீர்களா? நீங்கள் அங்கு இருக்கவில்லையா? வின்னிபெக்கில் இன்னொரு மனிதன் இருந்தான். அவனுடைய ஒரு காலானது, இன்னொரு காலை விட இரண்டு அல்லது மூன்று அங்குலம் சிறியதாய் இருந்தது. அவன் உயரமான காலணியை, ஒரு காலணி பெரிதாக செய்யப்பட்டதை அணிந்திருந்தான். அவன் ஜெபக்கூட்டத்திற்கு வரும்போது, ஒரு புதிய ஜோடு காலணியை அணிவதற்கு வாங்கிக்கொண்டு வந்தான். தேவன் அதைச் செய்தார். அப்பேர்ப்பட்ட விசுவாசத்துடன் இருக்கும் எவரையுமே அவர் ஏமாற்றமடைய செய்யமாட்டார். அவன் தனது புதிய காலணியோடு சென்றான். நடைபாதையில், அந்தப் பழைய காலணிகளை விட்டுவிட்டுச் சென்றான். அவன் முழுமையானான், முற்றிலும் சுகமாக்கப் பட்டான். அவர் ஆச்சரியமானாவர், இல்லையா? ஒவ்வொரு மாலையும் நமக்கு அதிக நேரம் இருக்காது. ஆனால், நமக்கு நிறைய மாலை நேரங்களும், பிற்பகல் வேளைகளும் வியாதியஸ் தருக்காக ஜெபிக்க இருக்கின்றன. அருமையான ஜனங்களாகிய நீங்கள் விரும்பினால், இயேசுவை உங்கள் இரட்சகராக அல்லது சுகமளிப்பவராக அறிந்திருக்கிற நீங்கள், வருகின்ற இந்த வாரம் சென்று உங்கள் முழு இருதயத்தோடு ஜெபிக்கும்படி கேட்டுக் கொள்வதை நான் விரும்புகிறேன். 8மேலும், நான் பல ஆயிர மைல்கள் (வானில்) பறக்க வேண்டியுள்ளது. வேன்கோவர் வேலை முடிந்த பின்பு, கலிபோர் னியா போன்று தூரமாக கடற்கரைப்பகுதிக்குச் செல்கிறேன். திரும்பி வந்து, நாளை போகவேண்டிய ஃபிரெஸ்னோவுக்கு, ஆர்மீனிய மக்களிடம் செல்லவேண்டும். அவாக் என்னும் பெயர் கொண்ட ஒரு பையனை, வியாதிக்காக ஜெபம் செய்யத்தக்கதாக அவர்கள் கூட்டிக் கொண்டு வருகிறார்கள். கெய்ரோவிலிருந்து, ஆர்க்கீலியன் என்னும் பெயர் கொண்ட ஒரு மனிதனுக்காக ஜெபிக்கும்படி அவனை அழைத்து வந்துள்ளனர். அதே சமயம், அவனுக்காக அழைப்பு விட்டிருந்தனர். இந்தியானாவில் அவர்கள் அழைத்து, கேன்சர் உள்ள ஒரு பெண்மணியிடம் நான் வரும்படி செய்தனர். அவளது இரண்டு மார்பகங்களும் எடுக்கப்பட்டு இருந்தன. அவளது நுரையீரல் துவாரம் வரை புற்றுநோய் சென்றிருந்தது. மூன்று தினங்கள் அவளுக்காக ஜெபிக்கப்பட்ட பின்பு, அவள் தெருவிலுள்ள கடைகளுக்குச் சென்றாள், மேலும் அவள் பூரணமாக சுகமாகி, புற்றுநோயின் அறிகுறியே இல்லாமல் இப்போது நன்றாக இருக்கிறாள். 9மேலும் இது, அங்கிருந்த ஆர்மீனிய மக்கள், கர்த்தராகிய இயேசுகிறிஸ்து எவ்வளவு ஒரு மகத்தான சுகமளிப்பவர் என்பதைக் காணச் செய்தது. நான் இப்போது சிலபேர் கூப்பிட்டுக் கொண்டு இருக்கிறார்கள். மீண்டும் இன்னொரு புற்றுநோய் நோயாளி அந்த பெண்மணியின் சிநேகிதி, அதற்குள் அவள் ஜீவிப்பதற்கு ஒரு சில மணி நேரங்களே, செயிண்ட் லூயிஸ் என்னுமிடத்திலுள்ள குறிப்பிடத்தக்க மருத்துவ நிபுணர்கள் சிலரால் கொடுக்கப்பட்டது. அவளுக்கு அறுவை சிகிச்சை செய்ய விமானம் மூலம் அவள் அங்கு கொண்டு வரப்பட்டாள். ஆனால் இப்போது, அவள் நன்றாக உள்ளாள். அந்தப் பாடலை அது என்னை நினைவு கூரும்படி செய்கிறார். ஆச்சரியமான கிருபை எவ்வளவு இனிமையாக ஒலிக்கிறது, அது ஈனன் போன்ற என்னை இரட்சித்தது அல்லது அது என்னை சுகமாக்கியது எனச் சொல்வோமாக. இப்போது இந்த பிற்பகல்..நான்... (ஒலிநாடாவில் காலியிடம் - ஆசி) ஜனங்களிடமிருந்து வெளிவரும் பிசாசுகள், ஜனங்கள் காண்பதற்காக எண்ணங்களை இருளாக்குகின்றன. ஆனால், நீங்கள் பயபக்தியுடன் இருந்தீர்களானால், நீங்கள் இங்கு ஃபோனிக்ஸில் தேவனுடைய மகிமையைக் காண்பீர்கள். இப்போது, நீங்கள் விரும்பினால் சிறு ஜெபத்தை ஏறெடுக்க, நாம் நம் தலைகளை தாழ்த்துவோமா என நான் நினைக்கிறேன். நீங்கள் விரும்பினால் எல்லாவிடத்திலும் இருக்கின்ற நீங்கள் எல்லோரும் குழந்தைகள் மற்றும் அனைவரும் உங்களால் கூடுமானவரையில் எவ்வளவு பயபக்தியுடன் இருக்க முடியுமோ, அவ்வளவு பயபக்தியுடன் இருப்பீர்களா...?... 10இயேசுவே, எங்கள் பரலோகப்பிதாவே, எங்கள் இருதயத்தின் ஆழத்திலிருந்து அரிசோனாவிலுள்ள ஃபோனிக்ஸுக்கு மீண்டும் வரும்படி கேட்கிறோம். உம்முடைய நேச குமாரனாகிய இயேசுகிறிஸ்து என்னும் நாமத்தில் வரும்படியாக ?.. அவர்கள்... சந்தேகம் எனும் நிழலுக்கு அப்பாற்பட்டு, சர்வ வல்லமையுள்ள தேவனுடைய வெளிப்பாட்டின் மகிமையை காணும்படியாகவும், செவிடும், ஊமையுமான ஆவிகள் மக்களை விட்டுப்போகவும், குருடர் பார்வையடையவும், முடமானவர்கள் விடுதலையாகவும், சாத்தானின் சக்தியால் பீடிக்கப்பட்டவர்கள் மற்றும் கட்டப்பட்டவர்கள் விடுதலை பெறவும் கிறிஸ்துவின் வல்லமை கீழே இறங்கி வரும்போது விடுதலையை பெற்றுக் கொள்வும் செய்வீராக. ஓ தேவனே, உம்மிடம் நான் ஜெபிக்கிறேன். (ஒலிநாடாவில் காலியிடம்-ஆசி) எல்லோரும் யாரெல்லாம் (ஒலிநாடாவில் காலியிடம் -ஆசி) இந்த ஆராதனைகளில் (ஒலிநாடாவில் காலியிடம் ஆசி) ஊழியக்காரர்களுக்கும் (ஒலிநாடாவில் காலியிடம் - ஆசி) ஃபோனிக்ஸ் என்னும் இந்தப் பட்டணத்திற்கு இங்கே பொருளுதவி செய்பவர்களுக்கும் ஜெபிக்கிறேன். உலகத்தின் மீது மனதை வைத்துள்ள அநேக மக்கள் இது எதைக்குறிக்கிறது என்று புரிந்து கொள்ளமாட்டார்கள். ஆனால் ஆவிக்குரியவர்களும், ஞானம் உடையவர்களும் இது எதைக் குறிக்கிறது என்றும் இது அடையாளம் என்றும் அறிந்துகொள்வார்கள். 11ஓ, பிதாவே! உம்முடைய வல்லமையை வெளிப்படுத்தும் படியாய், உம்மிடத்தில் ஜெபிக்கிறேன். இந்த அரங்கத்தில் எங்களுக்கு உரிமை தந்த ஒவ்வொருவரையும் ஆசீர்வதியும். நீர் அவர்கள் ஒவ்வொருவருடனும் இருக்க வேண்டுமாய் ஜெபிக்கிறேன், இவர்களுக்குள்ளே இரட்சிக்கப் படாதவர்கள் இருப்பார்களானால் அவர்கள் இரட்சிக்கப்படுவார்களாக. பிதாவே. இந்த இல்லமானது பலவிதமான பேச்சுக்களுக்கு பயன்படுவதால், பிதாவே, இந்தக் கட்டிடத்தை நீர் பரிசுத்தப்படுத்தி இயேசு கிறிஸ்துவுக்கான ஆராதனைகள் நடைபெறச் செய்யும்படியாய் இப்போதுதானே வேண்டிக் கொள்கிறேன். பாவிகள் இந்தக் கட்டிடத்தில் கல்வாரியை நோக்கி அழுது கொண்டு, இப்போதே இங்கே வரட்டும். வியாதியஸ்தர் விடுதலையடைவார்களாக. பிசாசுகள் அலறட்டும், வெளியே வரட்டும். இதுவரை ஏற்படாத ஒரு பெரிய அசைவை இந்த அருமையான சிறிய பட்டிணத்திற்கு இது கொடுக்கட்டும். பிதாவே! இங்கு உமக்கு நிறைய மனிதர்கள் இருக்கிறார்கள் என்று நம்புகிறேன். உலகத்தின் வேறுபட்ட பல பகுதிகளிலிருந்து இங்கு சுகமளிக்கும் கூடாரத்திற்கு வந்து கூடியிருக்கிறார்கள். நீர் அவர்களை சொஸ்தமாக்குவீர் என்று ஜெபிக்கிறேன், பிதாவே. இம்மானுவேலரின் நரம்பிலிருந்து வரும் இரத்தத் தினால் நிரம்பிய ஊற்று அவர்களுக்குண்டு என்று அவர்கள் தெரிந்துகொள்ளட்டும். ஓ, தேவனே! இதை அளியும். 12பிதாவே! மீண்டும் நான் கேட்கிறேன். ஒவ்வொரு ஊழியனையும் ஆசீர்வதியும். இந்த பிற்கலில் அவர்களது ஐக்கியமானது, இங்கே வருவதற்குத் தளர்ந்துள்ளது. நீர் எங்கள் எல்லோருடனும் இருக்க வேண்டுமென நான் ஜெபிக்கிறேன். மேலும் இப்போதும், அருமையான தேவனே, மலைகளின் மீது நீர் கொடுத்த மற்ற எல்லாவற்றுக்கும் நான் நன்றி கூறுகிறேன். இப்போது நான் புதிய பெலத்துடன் கீழே வந்திருக்கிறேன். ஓ, கிறிஸ்துவே! சாத்தான் எங்கள் முன் வைக்கக்கூடிய எதற்கும் அதிகமான இணைப்பாக உமது வரம் இருக்கிறது. தேவனுடைய மகத்தான அசைக்கக்கூடிய வல்லமை, எல்லாவற்றையும் தளரவிடட்டும். குளிரும், எந்த வித்தியாசமுமில்லாத இருதயங் களை உடைய ஆண், பெண், வாலிபர், வாலிபப் பெண்கள் கூட அவ்வாறு இருக்கட்டும். 13மலைகளினூடாக விமானங்கள் உறுமிச் செல்லும்போதும் பிதாவே! உதவி செய்யும். மீண்டும் நான் ஃபோனிக்ஸுக்கு அடுத்த ஞாயிறன்று பத்திரமாக வருவதற்கு, நீர் என்னை மறுபடியும் கொண்டு வரும்படியாக ஜெபிக்கிறேன். பிதாவே, நீர்தாமே எங்களுடைய இரட்சிப்பின் தலைவராயிருக்கிறீர். நீர் உதவி செய்வீர் என்று ஜெபிக்கிறேன். இப்போது, இந்த பிற்பகல் ஆராதனையை ஆசீர்வதியும். இங்கே உள்ள ஒவ்வொரு இருதயமும் விருத்தசேதனம் செய்யப் படுவதாக. தேவனுடைய வார்த்தையைக் கேட்க, செவிகளும் விருத்தசேதனம் செய்யப்படுவதாக. உம்முடைய ஊழியக்காரனின் உதடுகளை, எது சரியோ அதைப் பேசும்படியாக விருத்த சேதனம் செய்யும். மக்களின் விடுதலைக்காக, இந்த பிற்பகலிலே உம்முடைய மகத்தான வல்லமை இங்கு கொண்டு வரப்படட்டும். மேடையருகே வரக்கூடிய ஒவ்வொருவரும், ஒருமன உள்ளத்தோடு வரட்டும். “இது என்னுடைய நேரம், நான் விடுதலையாக வேண்டும், மற்றவர்களால் முடியுமானால் என்னாலும் கூடும்”. மேலும், அவர்கள் மௌனமாக இருந்துவிட வேண்டாம். இதை அடுத்த வாரம் இந்தப் பட்டிணத்தின் தெருக்களில் நடந்து சென்று சாட்சி கூறட்டும். தேவனுக்குத் துதிகளையும் மகிமையையும் செலுத்தட்டும். இது வியாபாரிகள் மற்றும் எல்லாரிடமும் கூட ஆரம்பமாகட்டும். ஒரு பெரிய விழிப்புணர்வு இங்கு வரட்டும். பிதாவே! தேவ ஆவியானவர் இன்னமும் எல்லாவிடங்களிலும் தலைசிறந்து காணப்படுவதைத் தெரிந்துகொள்ளட்டும். இருளான இடங்களுக்குள் ஊடுருவிச் சென்று அழுதுகொண்டிருப்பவர்களை இழுத்துக் கொண்டு வாரும். (ஒலிநாடாவில் காலியிடம்) 14இப்பொழுது, ஒரு மதிப்பீட்டை ஆராய்ச்சி செய்யும்போது, நான் ஃபோனிக்ஸில் இருந்தபோது, குறைந்த பட்சம் ஆறு...(ஒலிநாடாவில் காலியிடம்) நல்லது...25 அல்லது 35 ஆயிரக்கணக்கான ஜனங்களுக்காக ஜெபிக்கப்பட்டது. அதற்கும் அதிகமாகக் கூட இருக்கலாம் என நான் கூற முடியும். அதில் பத்தாயிரம் மக்கள், குறைந்தபட்சம், குணமானார்கள். நீங்கள் அதை எண்ணிப் பார்த்தீர்களா? புற்றுநோய்கள் முதலானவைகளும், தங்களது கடைசி நொடிப்பொழுதில் இருந்தவர்களும் கடந்த ஜெபக்கூட்டத்தில் சுகம் பெற்றனர். கனடா பகுதியில் மட்டும், 250 அல்லது அதற்கும் மேற்பட்ட, மாறு கண்பார்வை கொண்டவர்களது கண்கள் நேராக்கப்பட்டன என நான் யூகிக்கிறேன். கணக்கிலடங்காத ஊமையர் பலவிதமான தழும்புகளைக் கொண்டிருந்தோர் வந்திருந்தனர். சில செவிடு, ஊமை, சரியாக காது கேளாதோர் போன்றவைகளும் பூரணமாக சரியாக் கப்பட்டன. இப்பொழுது இது தூதனுடைய சந்திப்பின் மூலம் மட்டுமே நடந்தது. 15சில இரவுகளுக்கு முன்னர், வீட்டில் நின்றிருந்தேன். கனடாவிலிருந்து வந்ததும், வீட்டிற்கு ஐந்து நாட்களாக வரமுடிய வில்லை. ஜனங்கள் அவ்விடத்தில் மிகுந்த ஈடுபாட்டுடன் ஆழமாக இருந்ததால் அவர்கள் ஐந்து நாட்களும் என்னைப் பிடித்து வைத்திருந்தனர். சில நாட்களுக்கு முன்பு, சிலர் வருவார்கள், தேசத்தின் எல்லா பாகங்களில் இருந்தும்.... மேலும் அவர்களது... இரவு... கடந்த ஞாயிறு காலை, எனது சிறிய சபை, என்னால் அங்கு வந்து வெளிப்படுத்தின விசேஷப் பகுதியில் இருந்து அவர்களுக்கு உபதேசிக்க முடியுமா என்று கேட்டார்கள். நான் செய்தேன், பிறகு முடிவில், உதவிப் போதகர், “இப்பொழுது, சகோதரன். பிரன்ஹாம் வியாதியஸ்தருக்காக ஜெபிக்கமாட்டார். ஃபோனிக்ஸுக்குச் சென்று அடையும்படி தமது பலத்தைப் பிடித்துக் கொண்டு காத்துக்கொண்டிருக்கிறார்,” என்று கூறி, “எனவே ஒருவரும் ஜெபிக்கும்படியாகக் கேட்காதீர்கள்”, என்று கூறினார். ஆனால் நான், பதினொரு மணியளவில் அவர்கள் கரங்களைக் குலுக்கும்படியாக எழுந்து நின்றேன். இரண்டு மணிக்கு அவ்விடத்திலிருந்து என்னை அவர்கள் புறப்படப் பண்ணினர். 16மேலும் என்னிடம் ஒரு கைக்கடிகாரம் இருந்தது. ஒரு பெண்மணிக்கு ஒரு கட்டி இருந்தது. அவளைப் பிடித்த பிறகு, அக்கட்டி நிறுத்தியது....... அந்த அதிர்வுகள் எனது கடிகாரத்தை நிறுத்திவிட்டது. கடிகாரத்தோடு என்னால் மக்களுக்காக ஜெபிக்க முடியாது. அதை நான் இந்த மதிய வேளையில் என்னால் காண்பிக்கக் கூடும். ஒவ்வொரு முறையும் அது அதை நிறுத்திவிடும். தரமான, புதிய சிறந்த லான்ஜினஸ் கடிகாரத்தின் மேல் அந்த அதிர்வுகள், அது நின்று விடும். அதிர்வு அதை நிறுத்திவிடும். நான் ஒரு ஊழியரிடம் காண்பித்தேன்..... அவர் இந்த பிற்பகலில் இந்த அரங்கத்தில் எங்காவது இருப்பார். அவர்... அது... அது நின்று விட்டது. அதிர்வுகள் அதை நிறுத்திவிட்டன. பிறகு, ஞாயிறு இரவு, ஒரு ஆராதனை அவர்களுக்காகச் செய்ய அங்கிருந்தேன். ஏன்? சிலபேர் ஜெப வரிசையை அமைத்திருந்தனர். நான் அவர்களிடம், அவர்கள் விசுவாசிக்கக் கூடுமானால் எல்லோருக்குமாகக் கூட்டுப் பிராத்தனை ஏறெடுக் கலாமா என்று கேட்டேன். ஜெபிக்கிறோம் என்று அவர்கள் அப்படியே கூறினர். அவர்கள்....இருதயங்களை ஆசீர்வதிப்பாராக. அவர்கள் என்னை நெருங்கும்படியாக என் கைகளைக் குலுக்கவோ வேறு ஏதோவொன்றைச் செய்யவோ விரும்பினர். அவர்கள் எல்லோரும் கரங்களைக் குலுக்கி விட்டுக் கடந்து சென்றனர். அவர்களில் சிலர் புற்றுநோயிலிருந்தும் க்ஷயரோகத்திலிருந்தும் குணமடைந்து, அவர்களை நான் பார்க்கும்படியாக நின்றுகொண்டு இருந்தனர். நான் கூறிய சுகமான சில பேரும் அங்கு நின்றுகொண்டிருந்தார்கள். 17மேலும் நான்... அங்கு நான் நின்றுகொண்டிருந்தபோது, நான் இந்த தூதனுடைய பிரசன்னம் அருகாமையில் வந்ததை உணர்ந்தேன். அரங்கத்திலுள்ள பார்வையாளர்களை நோக்கிக் கொண்டிருந்தபோது. அவர் அழைக்கும்படியான ஒரு பெண் மணியை நான் ஜெபவரிசையில் கண்டேன். தேவன் அறிவார், அவளுக்கு என்ன தவறாக இருந்தது என்று எனக்குத் தெரியாது. நான் “நீ இங்கே வா” என்று அழைத்தேன். அவள் அப்படியே நின்று கொண்டு என்னைப் பார்த்தாள். நான், அங்கே இருக்கிற நீ“ என்றேன். அவள் கேட்டாள், ”நீர் இந்தப் பெண்ணைக் குறிப்பிடுகிறீரா?“, நான் சொன்னேன், ”ஆமாம்“, அவள் சொன்னாள், ”ஏன்? அவள் செவிடு“, நான் கூறினேன், ”நல்லது, அவளை இங்கே கொண்டு வாருங்கள், இதுதான் அவள் சுகமாகக் கூடிய தருணம்“, இப்போது, பாருங்கள், அது தேவனிடமிருந்து வரக்கூடியது என்றேன். நான், ”எவ்வளவு காலமாக அவள் செவிடாக இருக்கிறாள்?“ என்றேன். “அவளுடைய சகோதரி, இக்கட்டிடத்தில் எங்கேயோ இருக்கிறாள்,” என்றேன். இது மத்திய பாகத்தில் இருப்பதால் அநேகமான ஜனங்கள் இதே கட்டிடத்தில் இருக்கிறார்கள் என்று நான் யூகிக்கிறேன். எல்லாரும் இதற்குள் வரமுடியுமா? வெளியிலிருப்பவர்களும் கூட. அந்தப் பெண்மணி மேலே வந்தாள். அவள் சொன்னாள், அவளுடைய சகோதரி, “இவள் அவளுடைய வாழ்க்கை முழுவதும் செவிடாகத்தான் இருக்கிறாள். நடைமுறையில் குழந்தையிலிருந்தே, இரண்டு வயதிலிருந்தே” என்று கூறினாள். நல்லது, நான் அவளுடைய கைகளைப் பிடித்த மாத்திரத்தில், அது காட்டியது... நான் அவர்களுக்காக ஜெபித்துக் கொண்டிருந்த போது, நான் எனது வலது கையை உபயோகித்துக் கொண்டிருந் தேன். பிறகு இடது கையில் அதிர்வுகள் காணப்பட்டன. சில நொடிகளுக்குப் பிறகு, அந்தப் பெண்மணியை விட்டு, செவிட்டு ஆவி வெளியே போனது. அவள் பார்த்துக்கொண்டிருந்தாள். நான், (சகோதரன். பிரன்ஹாம் தன் விரல்களை சொடுக்குகிறார் - ஆசி) நான் என் விரல்களை சொடுக்கினேன். அவள் திரும்பி என்னைப் பார்த்தாள், நான் கேட்டேன், “உனக்குக் கேட்கிறதா? இல்லையா?” அவளது கேட்கும் திறன் மிகவும் சரியாக இருந்தது. அவள் அழ ஆரம்பித்துவிட்டாள். மிக நன்றாக உடை உடுத்தியிருந்தாள். கரங்களை மேலே, வானத்தை நோக்கி உயர்த்தி, அழுதுகொண்டிருந்தாள். மக்களும் அவளைச் சுற்றி யோட ஆரம்பித்துவிட்டனர். பிறகு என்னைப் பின்பக்க வழியாக வெளியே அனுப்பிவிட்டனர். 18ஏனெனில், நீங்கள் பாருங்கள் நண்பர்களே! நான்... நான் ஒரு மனிதப்பிறவி, நான் ஒரு மனிதன். ஆனால், அது எல்லாம் வல்ல தேவனிடமிருந்து வரவேண்டும். நீங்கள் எஜமானரைக் கவனித்தீர்களா? அவர் நகரத்திற்குள் சென்று, ஒரேயொரு அற்புதத்தை நிகழ்த்தி விட்டு, நகரத்தை விட்டுச் சென்றார். நீங்கள் அதைக் கவனித்தீர்களா? அநேகமுறை அப்படித்தான். எலிசாவின் நாட்களிலே அநேக குஷ்டரோகிகள் இருந்தனர், ஆனால் ஒரே ஒருவன் மாத்திரமே அவரிடம் அனுப்பட்டான். அவன் நாகமான், அது உண்மை அல்லவா? இன்னும் எத்தனை குஷ்டரோகிகள் அங்கு வந்தார்கள் என்று சொல்வது கடினம். ஆனால் ஒருவன் மாத்திரமே அவரிடம் அனுப்பப்பட்டான். அந்த ஒருவனைத்தான் கர்த்தர் உத்தேசித்திருந்தார். மேலும் நான் சொல்லக்கூடிய ஒரேயொரு வழி இதுதான், இந்த இயற்கைக்கு மேம்பட்ட வல்லமையை அணுகுவதற்கு, நான் அந்த நபரிடமிருந்து ஏதோ ஒரு உணர்வைப் பெறுகிறேன். அது என்னுடையதல்ல, அது அவருடைய வல்லமை. பிறகு எதுவும் இல்லை. என்ன விஷயம் என்பது அதுவல்ல... இதை நான் கர்த்தரின் நாமத்தில் சொல்கிறேன். (ஒலிநாடாவில் காலியிடம்) 19இப்போது, அவர் யாரிடம் பேசிக்கொண்டிருந்தார்? மோசேயிடம். உங்களில் அநேகர், உங்கள் ஞாயிறு வகுப்புப் பாடங்களில் இந்த மகத்தான வேதாகமத்திலுள்ள மோசே எனும் பாத்திரத்தைப் பற்றிப் படித்திருப்பீர்கள். எனக்கு மோசேயைப் பிடிக்கும். ஏனெனில் அவன், வரக்கூடிய கிறிஸ்துவின் நிழலாயிருக்கிறான். அவன் சரியாக கிறிஸ்துவின் வருகைக்கு நிழலாயிருக்கிறான். இப்போது கவனிக்கவும். இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்துக்கு வந்தபோது நானூற்று இருபது வருடங்கள் அடிமைத்தனத்திலிருந் தார்கள். இதை ஏற்கனவே அவர் ஆபிரகாமுக்கு அவர்கள் அப்படி இருப்பார்கள் எனக் கூறினார். வாக்குத்தத்தின் நேரமானது சமீபித்தபோது அது எவ்வாறு என நீங்கள் கவனிக்க நான் விரும்புகிறேன்... இப்போது கவனியுங்கள் வாக்குத்தத்தின் நேரம் எவ்விதம் எப்போது சம்பவித்ததோ, ஜனங்கள் அந்த நேரத்திலிருந்து ஜனங்கள் அவர்களுக்கு ஏதோ ஒன்றோ, சில பிரச்சினைகள் உண்டானதைக் காண ஆரம்பித்தார்கள். உங்களுக்கு அது தெரியுமா? இனி ஒருபோதும், தேவனுடைய பிள்ளைகளின் மத்தியில், “நான் இந்த சபையைச் சார்ந்தவன், நான் அந்த சபையைச் சார்ந்தவன்,” என்ற பாகுபாடுகள் எதுவும் இல்லாத நேரம் வருமென நான் விசுவாசிக்கிறேன். சிலுவையின் பரிகாரம், கிரயத்துக்குக் கொள்ளப்பட்ட எல்லா தேவனுடைய சபையையும் ஒன்று கூட்டும் என்றும், நாமனைவரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்று என்றும் விசுவாசிக்கிறேன். அதன் பிறகு அவர் தமது வீட்டிற்கு அவளை அழைத்துச் செல்வார். இப்போது, நாம், இந்த உபதேசமே சரி! அல்லது அந்த உபதேசமே சரி! என்று விவாதிக்க வேண்டாம். 20இப்போது கவனியுங்கள். பிறகு வாக்குத்தத்தத்தின் நேரம் நெருங்கிய சமயத்தில், யோசேப்பை அறியாத ஒரு பார்வோன் எழும்பி, ஜனங்கள் மீது பாரத்தை சுமத்தினான். ஜனங்களும் தாங்கள் செய்தே ஆகவேண்டிய வேலைகளை, செங்கற்கள் மற்றும் சிலவற்றை செய்யமுடியாமல் மிகவும் கஷ்டப்பட்டனர். அதன்பிறகு, தேவன் தம்முடைய பிள்ளைகளை வருத்துவார் என்று நினைக்கிறீர்களா? ஆம். தேவனுடைய வார்த்தை நித்தியகாலமாய் உண்மையாக இருக்கிறது, அது சரியா? மேலும் அவர்களை விடுதலை செய்வார் என வாக்குரைத்தார். வேறு எந்த வழியிலும் இல்லை. ஆனால் இந்த வழியில்தான் அவர் செய்ய வேண்டியிருந்தது. ஆகவே, இஸ்ரவேலின் உபத்திரவமான வேளையின் போது, தேவன் ஒரு தூதனை பூமிக்குக் கீழே கொண்டு வரவேண்டிய தாயிருந்தது. ஆனால் தூதன் வருவதற்கு முன்பதாக, மோசே என்னும் பெயரால் ஒரு சிறுவனை அங்கே பிறக்கச் செய்தார், அது சரியா? இந்த சிறு பையன் மோசே ஒரு விநோதமான பிறப்பினால் பிறந்தவனாயிருந்தான். பிறகு அவன் உரிய வயதை அடைந்தபோது, அவன் அடிமைத்தனத்தில் இருந்த இஸ்ரவேல் ஜனங்களை விடுதலை செய்ய வெளியே அனுப்பப்பட்டான். அவன் புறப்படுவதற்கு முன்பு தேவன் அவனிடம், “நான் என்னுடைய - என்னுடைய தூதனை உனக்கு முன்பாக அனுப்புவேன்” எனக் கூறினார். இப்போது, தேவன் தூதனை கீழே அனுப்பியிருக்கலாம், அவரால் முடியாதா? ஆனால், அதற்குப் பதிலாக, ஒரு மனிதனுடைய குரலின் மூலம் பேசக்கூடிய ஒரு தூதனை அனுப்பினார். தேவன் எப்பொழுதும் மனிதனை தம்முடைய வேலைக்காக பயன்படுத்தினார், அது சரியா? அவர் நிறுவனங் களையும் மற்றவைகளையும் பயன்படுத்துவதில்லை, அது போன்ற இயந்திரக் கருவிகளையும் பயன்படுத்துவதில்லை. மனிதர்களைப் பயன்படுத்துகிறார். பரிசுத்த ஆவியானவர் தாமே மனிதன் மீது இறங்குவார், அதுவே இந்த பூமியின் மீது தேவனுடைய உபகரணமாகும். 21இந்த பூமியில் உள்ள எல்லாவற்றின் மேலும் எல்லா மிருகங்கங்களின் மேலாகவும் முதன் முதலாக நியாயாதிக்கத்தை அவன் உடையவனாயிருந்தான் அது சரியா? பின்பு அவன் - அவன் தன்னுடைய அதிகாரத்தை இழந்துவிட்டான். மேலும், வேதாகமத்தின் மூலமாக முதலாம் ஆதாம் எதை இழந்தானோ, அதை இரண்டாம் ஆதாம் கிறிஸ்து மறுபடியும் அதை மனுக்குலத் திற்கு திரும்ப அளித்தார் என்று போதிக்கப்பட்டுள்ளோம். இப்போதும் நண்பர்களே! இது இவ்வாறு இருக்க, ஊழியக்காரர்களே, இன்றைய சபையைக் குறித்தமட்டில் என்ன வாயிருக்கிறது? அதைத்தான் நான் தெரிந்துகொள்ள விரும்புகிறேன். கிறிஸ்துவானவர் தேவனுக்கும், மனிதனுக்கும் இடையே உள்ள தவறவிடப்பட்ட ஒரு இணைப்பானால் அவர் தேவனை யும், மனிதனையும் இணைக்க திரும்பவும் வருகிறார். இன்றைய காரியம் என்ன? இது அவிசுவாசத்தினால்தான், மேலும் நீங்கள் எதையோ தொடங்குவீர்கள், சிறியதாக எதையோ பார்ப்பீர்கள், உடனே கூறுவீர்கள், “ஓ, நல்லது, போகட்டும் இது தேவனால் ஆனது அல்ல,” என்பீர்கள். தேவனிடத்தில் அன்பு கூருகிறவர் களுக்கு, எல்லாமே நன்மையாகவே நடக்கிறது. நீங்கள் ஒரு வீட்டைக் கட்டுவீர்களானால், நீங்கள் கூறலாம், “நல்லது, இந்த ஆள் இங்கே சரியாகப் பொருந்தவில்லை, இந்த அடைப்பைப் பார், எங்கேயுள்ளது, இந்தப் பெரிய திறந்த வெளி இங்கேயுள்ளது. ஓ, அது பார்ப்பதற்கு,” . இப்படியிருந்தால் தொடர்ந்து செல் வீட்டைக் கட்டிக் கொண்டிரு. தேவன் வேறொரு அடைப்பானை அங்கே பொருந்தும்படியாக வைப்பார். அது அங்கே நிரப்பப்படும். ஒரு வீட்டை அப்படிக் கட்ட முடியாது. எனவே, இன்று, தேவன் அசையும் போது அதைக் குறித்து நாம் மறந்து விடுவோம். சர்வ வல்லமையுள்ள தேவனுடைய ஆவியோடு அசைந்து செல்வோம். அப்போது தேவனுடைய வீடு திரும்ப அளிக்கப்பட்டுவதை அங்கே காண்போம். 22கவனிக்கவும். அந்நாளில் தேவன் தம்முடைய பிள்ளைகளைக் கொண்டு வந்தபோது, ஒரு பெரிய உபத்திரவம் ஜனங்களின் மீது எழுந்தது. மோசே விடுதலை செய்யக்கூடியவனாக அனுப்பப் பட்டான். அவன் செங்கடலைப் பிளந்தான், அவன் இவ்வாறு எல்லா அற்புதங்களையும் செய்தான். (ஒலிநாடாவில் காலியிடம்) எகிப்திய இரவைப் பற்றி ஒரு ஹாட்டன்டாட்க்கு தெரிந்ததைக் காட்டிலும் அதிகமாக அவர்களுக்குத் தெரிய வில்லை , அது சரி. வானசாஸ்திரி நிபுணர்கள் அடையாளம் காண்பதற்கு முன்பே, பரிசுத்த ஆவிதாமே அடையாளம் கண்டு கொண்டுள்ளார். அது உண்மை. எந்த மனிதனும் அதைப்பற்றி கூறலாம். ஆனால், தேவன் அதை நிரூபணம் செய்யாவிட்டால், அது தவறாகிவிடும், அது சரியா? ஆனால், தேவன் அதை நிரூபணம் செய்தால் அதுவே தேவனுடைய செயலாகும். அது உண்மைதானே? 23நான் ஒரு தீர்க்கதரிசியின் பெயரால் இங்கு, ஃபோனிக்ஸுக்கு வந்து, ஒரு தீர்க்கதரிசி செய்யக்கூடியவைகளை செய்யாமல் இருந்தால் என்னை நம்பாதீர்கள், ஆனால் நான் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் வந்தால், தீர்க்கதரிசனத்தின் பெயரால், அவரது ஊழியனாக, அவரது ஊழியனைப்பற்றி எழுதப்பட்டு அதன்படி செய்தால், பிறகு நீங்கள் என்னை நம்பலாம். நீங்கள் அப்படிச் செய்வீர்களா? ஒரு செவிடன் கேட்கவில்லையென்றால், ஊமை பேசவில்லையென்றால், குருடன் பார்க்கவில்லை யென்றால், நொண்டியானவன் நடக்கவில்லையென்றால், பாவங் களைக் குறித்து தீர்க்கதரிசனங்கள் ஜனங்களிடம் முன்பே சொல்லப்படாமலிருந்தால், நீங்கள் குழந்தையாயிருந்த நேரம் முதல் செய்த உங்கள் பாவங்கள் முன் சொல்லப்படாவிட்டால் என்னிடம் வந்துள்ள இந்தத் தூதன் தவறு என்றும், நானும் அதனுடன் தவறாயிருக்கிறேன் என்றும் நம்புங்கள். ஆனால், அது உங்களுக்கு முன்பதாக இந்த மேடையின் மீது தம்மைத்தாமே வெளிப்படுத்தினால், நீங்கள் அதை விசுவாசித்து உங்கள் பாவங்களிலிருந்தும், அவிசுவாசத்திலிருந்தும் மனந்திரும்புங்கள். ஏனெனில் அவரது வருகையின் மணிநேரமானது நெருங்கி வருகிறது. அது சரி. ஏனெனில் அவர் ஒருவர் மாத்திரமே தமது வார்த்தையை உறுதிப்படுத்த அச்செயல்களைச் செய்கிறார். பாருங்கள், எப்படியோ, இந்த பூமிக்கு ஏதோ நியாயத்தீர்ப்பு அனுப்பப்படுவதற்கு முன்பு, தேவன் முன்னதாக ஜனங்களை எச்சரிக்கிறார். அது சரியே! நண்பர்களே, நீங்கள், அது தேவனுடன் தொடர்புடையதாயிருந்தால், என் வார்த்தையைக் கேளுங்கள். இந்த உலகத்தை எல்லாம் தாக்கக்கூடிய, மிகப்பெரிய நியாயத் தீர்ப்புக்களில் ஒன்று - அது சாலையின் மேல் உள்ளது. இப்போது அதை நினைவு கூருங்கள். சில நாட்களில் நான் சென்று விடுவேன். ஆனால் நீங்கள் - நீங்கள் ஞாபகம் கொள்ளுங்கள், உங்களில் இளவயதுடைய வாலிபர், சில வயதானவர்கள், நான் உங்களிடம் உண்மையையே கூறினேன் என்பதைப் பார்ப்பீர்கள், அது சரியே!. 24இந்த வரம் எதனால் ஜனங்களுக்கு வருகிறது... நீங்கள் ஜெபித்து, பிறகு தேவனிடம் வரங்களுக்காக வேண்டினால், அவர் அதை அனுப்புவார். சில மாதங்களுக்கு முன்பு, நான் இங்கு ஃபோனிக்ஸில் இருந்தேன். அது புதியதாய் இருந்தது. ஆனால் இப்போது, சந்தேகமில்லை, உங்களுடைய முன்னேறிக் கொண்டு வரும் முதன்மையான செய்தித்தாள்கள் அல்லது உங்கள் வார, மாத இதழ்கள், தி டைம்ஸ், தி லைப் முதலானவை... (ஒலிநாடாவில் காலியிடம்) உலகத்தைச் சுற்றிலும் ஆழமாகக் கேட்கப்பட்டன. இந்த வீட்டிற்குள் வர இருந்த இரண்டு இரவுகளுக்கு முன்னர், ஐந்து வேறுபட்ட நாடுகள் என்னை அழைத்தன. துருக்கியின் தலைநகரிலிருந்து அழைத்து, “சர்வ வல்லமையுள்ள கர்த்தராகிய தேவன், அமெரிக்காவிலே, தமது கரங்களை நீட்டி குணமளித்ததாகக் கேள்விப்பட்டோம். மேலும் எங்களுக்கும் சில ரொட்டித் துண்டுகள் கிடைக்க ஏதாவது வழியுண்டா?” என்று கேட்டனர். பசியுள்ளவர்களும், அஞ்ஞானிகளும்... ஓ, ஜனங்களே! உங்களது கர்த்தரின் நாமத்தில் எழுந்திருங்கள். கொடுக்கப் பட்டுள்ள உங்கள் சிலாக்கியத்தை உரிமை கோருங்கள். ஏனெனில் நீங்கள் சொஸ்தமடையத்தக்கதான இந்த மணிவேளை உங்களுக்காக இங்குள்ளது அது சரி. தேவனை மகிமைப்படுத்தவும், அவரது ஆவியைப் பெற்றுக் கொள்ளவும், அவரது ஆசீர்வாதங்களைப் பெறவும் எல்லா விதமான சம்பிரதாயங்களையும் விட்டுவிடுங்கள். சடங்காச் சாரியங்கள் உடைய மதத்தை அறுத்து விடுங்கள், ஜீவிக்கின்ற தேவனுடைய இராஜ்ஜியத்திற்குள்ளாக வந்து விடுங்கள். மனிதனின் ஆத்துமாவை எழுப்புகிறவரும், நீதியின் பாதைகளுக் குள் உங்களை நடத்துகிறவருமாகிய அவரை ஆவியோடும், சத்தியத்தோடும் ஆராதிக்க வாருங்கள். ஏனெனில் இப்போது வேளை வந்துவிட்டது. இப்போது தேவன் அவரது எச்சரிப்பை அனுப்பி இருக்கிறார். 25கையிலிருந்து வருகின்ற அதிர்வுகளினால், அதே தேவன் தமது தூதனை மோசேக்கு முன்பதாக அனுப்பினார்... (ஒலிநாடாவில் காலியிடம்) இங்கே தூதன் இருக்கிறார். அது சரி (ஒலிநாடாவில் காலியிடம்) நான் நேர்மையாக இருக்க முயற்சி செய்கிறேன். இப்போது உங்களுக்கு இது தெரியவேண்டும் என விரும்புகிறேன். காலைக்கு முன்பதாகவே நான் போகக்கூடும்?. எனக்குத் தெரிய வில்லை . அந்த இரவில், எனது அறையில் அவர் வந்தபோது (உங்களிடம் ஜனங்களே) ஒரு நட்சத்திரத்தைப் போல, அது அநேகமுறை எனக்குத் தோற்றமளித்தது. நான் அநேக முறைகள் அதைப் பார்த்திருக்கிறேன். ஆனால், கண்ணுக்குப் புலப்படக் கூடிய விதத்தில் அது வந்தபோது, அது ஒரு மனிதனாக, இருநூறு பவுண்டு எடை கொண்ட அளவு இருந்தார். இரண்டு வருடங்களுக்கு முன்னர், நான் ஒரு அறையில் உட்கார்ந்திருந்தேன். நான் என்னுடைய சிறு ஸ்கோஃபீல்டு வேதாகமத்தை வாசித்துக் கொண்டிருந்தேன். எனக்கு ஏதோ சத்தம் கேட்டது. முதலில் நான் ஒரு ஒளியைப் பார்த்தேன். அதை நான், ஒரு வாகனம் மூலையில் சென்று திரும்பியது என்று நினைத்தேன், ஆனால் அது திரும்பியது, ஆனால் அது இன்னும் பிரகாசமானது. ஆனால் அங்கு எந்தக் காரும் இல்லை. பிறகு இப்படியாக ஏதோ வருவதும், போவதும், நடப்பதுமாகக் கேட்டேன். (சகோதரன். பிரன்ஹாம் பீடத்தை நான்கு முறை தட்டுகிறார் - ஆசி) நான் பார்த்த போது, அந்த வெளிச்சம் பெரிதாகியிருந்தது, எனக்கு மேலே ஒரு பெரிய நட்சத்திரம் தொங்கிக் கொண்டிருந்தது. மேலும் அந்த ஒளி, ஒருவிதமான பச்சை நிறம் அதிகமாகவும், பச்சைக்கும் மஞ்சளுக்கும் இடையே இருக்குமாப்போல தரையில் பிரகாசித்துக் கொண்டிருந்தது. இந்த வெளிச்சத்தினூடாக நடந்து வந்தது எதுவெனில், ஒரு மனிதன் - முன்பு நான் சொன்னது போல இருநூறு பவுண்டு எடையுள்ள ஒரு மிகப்பெரிய மனிதன் போல காணப்பட்டார். கிறிஸ்துவின் ஓவியங்களில் காணப்படுவது போல அவருக்கு அவருடைய முகத்தில் தாடி இல்லாதிருந்தது. இவர் யார்? எனக்குத் தெரியவில்லை. ஆனால் அவருக்கு (ஒலிநாடாவில் காலியிடம்) ... தோள் இருந்தது, ஏறக்குறைய ஒலிவ நிறத்தைப் போன்றிருந்தார். அவருக்கு கருமையான கண்கள் இருந்தன. அவர் இந்த ஒலிப்பெருக்கி இங்கு இருப்பது போல அவ்வளவு பக்கத்தில் நடந்து வந்தார். 26ஆம் அது உண்மை நண்பர்களே, என்னால் பேச முடியவில்லை. அவர் என்னிடம் சொன்னார்... நான் அங்கு உட்கார்ந்து இருந்தேன். அவர் சொன்னார், “பயப்படாதே, தேவனுடைய பிரசன்னத்திலிருந்து நான் அனுப்பப்பட்டுள்ளேன். உன்னுடைய இந்த வினோதமான வாழ்க்கை, வினோதமான பிறப்பு, (ஒலிநாடாவில் காலியிடம்) உலகத்திலுள்ள ஜனங் களுக்கு தெய்வீக சுகமளித்தலின் வரம் - இவைகளை உனக்குக் கூறவேண்டும்,” மேலும் அவர், “நீ நேர்மையுள்ளவனாயிருந்தால், ஜனங்கள் உன்னை விசுவாசிக்கும்படியாகச் செய்தால் உன்னுடைய ஜெபத்திற்கு முன்பு ஒரு வியாதியும் நிற்காது, புற்று நோய் கூட” என்று கூறினார். மேலும் அவர், “உன்னுடைய கரங்களின் மீது உண்டாகும் அதிர்வுகள் கடந்து வரும்போது, நீ ஜனங்களுடைய வியாதிகளைக் கூறுவாய். இன்னும் நீ அதிக பயபக்தியோடு இருந்தால், அவர்களுடைய வாழ்க்கையில் செய்த பாவங்களையும் மற்றும் அவர்கள் செய்த பிறவற்றையும் கூறுவாய்,”. அருமை நண்பர்களே, இந்த பிற்பகலில், வேதாகமம் எனக்கு முன்பாக இருக்க, இது நிறைவேற வேண்டியதாயுள்ளது. நான் தொடர்ந்து சென்ற போது... (ஒலிநாடாவில் காலியிடம்). 27இப்போது, நான் அதைத்தான் கேட்கிறேன். இந்த பொதுக் கூட்டத்தில் இப்பொழுதே, நான் அவ்வாறு கேட்கப்போவதில்லை. ஏனெனில், உங்களில் அநேகர் உங்கள் கரங்களை உயர்த்தி, உங்களுக்குப் புரியவில்லை என்று கூறலாம். ஆனால் இங்கு சிலர் இருக்கிறார்கள், ஆனால் இதை ஆவியானவரால் அறிந்து நான் விசுவாசிக்கிறேன். இந்த பிற்பகலில் என்னைத் தானே இழுக்க முயற்சி செய்கிறேன், எவ்வளவு கடுமையாகப் பேசமுடியுமோ, அவ்வளவு கடுமையாக என்னால் முடிந்தவரை பேச விரும்பு கிறேன். கவனியுங்கள், இப்போது ஆவிக்குள்ளாக இங்கு அநேக, அநேக காரியங்கள் நடக்கப்போகின்றன என நான்... குறிக்கவும்... (பாருங்கள்), ஏனெனில், அங்கு விசுவாசம் அமைந்து இருக்கிறது. இந்தக் கட்டிடத்தின் வலதுபுறத்திலே, அமர்ந்து கொண்டிருக் கும் ஒரு மனிதனை நான் அறிவேன். அவனை இங்குள்ள மேடைப் பகுதிக்கு வரும்படி அழைக்கக்கூடும். இப்பொழுதே அவன் குணமடைவான். அது சரியே. இக்கட்டிடத்தில் இருக் கிறான் என்பது எனக்குத் தெரியும். என்னுடைய இடது புறத்தி லிருந்து அவனுடைய ஆவி வருவதை இங்கு உணருகிறேன். அது உண்மை. 28அன்றொரு இரவு அந்தக் கட்டிடத்தில் அமர்ந்து இருந்த ஒரு சிறிய ஸ்பானிஸ் பெண், ஸேக்ரமெனடோ என்ற இடத்திலிருந்து வருகிறவள். கட்டிடத்தின் பின்பகுதியில் அமர்ந்திருந்தாளா என நான் ஆச்சரியப்படுகிறேன். தன்னுடைய இருதயத்தில் தாமே அவள்... அவள் கத்தோலிக்கப் பெண், “சகோதரன். பிரன்ஹாம் அவர்களை இவ்விடத்தில் எங்கே இருக்கிறார் என்று நான் பெற முடியாது. ஆனால் அவர் கண்களினால், என்னைக் கண்டாரா னால், நான் குணமடைவேன்” என்றாள். அப்பெண்ணைக் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. அவள் மிக தூரத்தில், நீண்ட கடற்கரையோரம் போன்ற இந்த ஜெபக்ககூட்டத்தில் எங்கேயோ இருந்தாள். நான் அந்த இரவு ஆராதனைக்கு வந்தேன். நான் பிரசங்கித்துக் கொண்டிருந்தேன். நான் அப்படிப் பிரசங்கித்துக் கொண்டிருந்தபோது, எனது வலது புறமாக, விசுவாசமானது இழுத்துக் கொண்டிருந்ததைப் போன்று கண்டேன். நான் கீழேயும், பின்புறமும், கட்டிடத்தினூடேயும் பார்த்துக் கூறினேன், “மிகவும் தூரத்தில் அமர்ந்திருக்கும் அந்த இளம் பெண்ணை , இங்கே வரச்சொல்லுங்கள்,” “இளம் பெண்ணே ! இங்கே வா,” என்றேன். அவளது காட்சி எனக்குக் கிடைத்தது. அவள் ஏறக்குறைய மயக்கமே அடைந்துவிட்டாள். அவள், “நானா?” என்றாள். நான், “சிறிய வட்டமான தொப்பியை அணிந்துள்ளவளே, இங்கே வா,” என்றேன். அவள் பணிவோடு மேலே வந்தாள். அவளுக்கு க்ஷயரோகம் இருந்தது. நான் அவளை எனது கையில் எடுத்து, உனக்கு க்ஷயரோகமுள்ளது, ஆனால் “கர்த்தர் உரைக்கிறதாவது” சரியாகிவிட்டது. அது அவ்வாறு செய்யப் பட்டது. அடுத்த நாள் காலை அவள் ஞானஸ்நானம் பெற்றுக் கொண்டு தனது குடும்பத்தைக் கொண்டு வந்தாள். மேலும், அவள் இங்கு ஃபோனிக்ஸில் என்னைச் சந்திக்க இருக்கிறாள். அவள் எங்கு இருக்கிறாள் என்று எனக்குத் தெரியவில்லை . இந்தக் கட்டிடத்தில் இருக்கிறாயா, சகோதரி? எங்காவது இப்போது? சேக்ராமென்டோவிலிருந்து மேலே கலிபோர்னியாவுக்கு? இந்த முறை ஃபோனிக்ஸ் ஜெபக்கூட்டத் திற்கு அவள் வருவதாக இருந்தது. இங்கு இருந்தால், எழுந்து நில், கரத்தை உயர்த்திக் காண்பி, நான் ஒருவேளை உனது கரத்தைத் தவறவிடலாம். இக்கட்டிடத்தில் நீ இருந்தால், சிறு ஸ்பெயின் நாட்டுப் பெண் 18 அல்லது 20 வயதையொத்த பெண் என்று யூகிக்கிறேன். அவள் இங்கு இருக்க வேண்டியவள். இந்த வாரம் உங்களிடம் சாட்சி கூறுவாள். அது, இங்கு நடந்த நூற்றுக்கணக்கானவற்றில் ஒன்றாகும். 29இப்போது, அதே காரியம் இங்கும் செய்யப்படும். உங்களது கவனத்தைத் திருப்பக்கோருகிறேன். இந்த ஜெபவரிசையில் இந்த மனிதன் வந்தால், நான் அவனை அழைக்க பயப்படுகிறேன். ஏனெனில் அது பாதிக்கக்கூடிய ஒரு சப்தமாக இருக்கும். இந்த நேரத்தில் அவனை இங்கு அழைப்பது தலையாயது அல்ல ஆனால், அவன் இங்குதான் இருக்கிறான் என்பது எனக்குத் தெரியும். இங்கிருக்கும் மனிதன் முழுமையாக ஒரு அந்நியனா யிருக்கிறான். எனது ஜீவியத்தில் இதுவரை அவனைக் கண்ட தேயில்லை. எவ்வளவாய் செவிடாய் இருக்கமுடியுமோ அவ்வள வாய் செவிடாயிருக்கிறான், அது சரி. ஆனால் இங்குதான் அமர்ந்திருக்கிறான். இந்தப் பிற்பகலிலே அவன் இக்கட்டிடத்தில் இருப்பானே யானால், இந்த ஜெபவரிசையில் வந்தால், இப்போது என்னிடமுள்ள அபிஷேகத்தின் கீழ் அவனைத் தொடக்கூடு மானால் அவனது செவிகள் முழுவதுமாகத் திறக்கப்படும், இது “கர்த்தர் உரைக்கிறதாவது” ஆகும். அது நடக்கவில்லையானால், என்னைக் கள்ள தீர்க்கதரிசி என்று அழையுங்கள். மேடைக்கு நான் அவனை அழைக்கக்கூடும். இன்னொருமுறை அவர்.. எனக்குக் கொடுத்தால். அதைக் குறித்து அவர் என்ன கூறுகிறார் என்று பார்க்க நான் ஒரு நொடி காத்துக் கொண்டிருக்கிறேன். இப்போது, நான் உங்களிடம் கூறுவதை கவனித்துப் பாருங்கள். 30இப்போது, ஜெபவரிசை அமைக்க, இன்னும் சில கணத்தில் இருக்கிறோம். மேலும் நீங்கள் இதைச் செய்யும்படி விரும்பு கிறேன். இக்கட்டிடத்தில் நவீனமான நாத்தீகன் யாராவது இருப்பின், கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் நான் எச்சரிக் கிறேன். இந்த சமயத்தில் இக்கட்டிடத்திற்குள் இருக்கவேண்டாம். புற்றுநோய், செவிடு, காக்காய் வலிப்பு போன்றவை ஒருவரிட மிருந்து மற்றவரிடம் வந்துவிடும். அது குறித்துப் பிறகு உங்களுக்கு விளக்குகிறேன். நீங்கள் அனைவரும் புரிந்து கொண்டீர்களா? உங்களில் எத்தனை பேர் நான் இவ்வாறு விளக்கியதை கேட்டிருக்கிறீர்கள்? எவ்வாறு வியாதிகள் கிருமிகளாகவும், கிருமிகள் ஜீவனாகவும் இருக்கின்றன. நீங்களே ஒரு கிருமிதான், ஜீவன் என்னும் கிருமியிலிருந்து நீங்கள் வந்துள்ளீர்கள், அது சரியா? நல்லது, நீங்கள் உங்கள் தகப்பனால், தகப்பன் மற்றும் தாய் மூலம், ஜீவ கிருமியினால் வந்துள்ளீர்கள். க்ஷயரோகம் ஒரு அணு. கண்புரை ஒரு அணு அது சரியா? எங்கே இருந்து அவைகள் வருகின்றன? என்ன மாதிரியான ஜீவன் அவைகள்? மருத்துவர்கள் கூறுகின்றனர்... மருத்துவப் பெயர்களாக, “புற்று நோய், கண்புரை நோய்” என்பன போன்று அழைக்கிறார்கள். இயேசுதாமே அதைப் பிசாசு என அழைக்கிறார் அது சரியா? அவைகள் அதுதான். ஒவ்வொருவருக்கும் “பிசாசு” என்பதற்கு “துன்புறுத்துபவன்” என்பது பொருள் என்று தெரியும், அது ஏதோ ஒன்று உங்களுடைய சரீரத்தைத் துன்புறுத்துவதாகும். 31இப்போது, நான் அதை அறிய விரும்புகிறேன். தேவன், தமது தெய்வீக சுகமளித்தலை அனுப்பியுள்ளார் என்று, எத்தனை பேர் விசுவாசிக்கின்றீர்கள்? இப்போது நாம் பார்ப்போம். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஓ, என்னே! எண்பத்தைந்து சதவீத ஜனங்கள், இக்கூட்டத்தில் நம்புகிறார்கள். அப்படியானால், இந்த விதத்தில், சர்வ வல்லமையுள்ள தேவனுடைய மகிமையைக் காண்பதற்கு நான் நிச்சயமுடையவனாயிருக்கிறேன். இப்போது, ஞாபகம் கொள்ளுங்கள், ஜெபத்திற்காக வார்த்தையை நான் ஏறெடுக்கும் நேரத்தில், இங்கு உங்களோடு ஜெபித்த பின்பு, நான் உங்களுக்கு சில அறிவுரைகளைக் கூறட்டும். உங்கள் சார்பாகவும், என் சார்பாகவும், அது ஒரு கடிந்துகொள்ளுதலை விளைவிக்கும். இன்னொரு விஷயத்தையும் நினைவில் கொள்ளுங்கள். இது அற்புதங்களை நடத்தும் வரம் அல்ல, அவர்... இலினாயிஸில் உள்ள வேண்டாலியாவில் கடந்த முறை அவர் என்னிடம் பேசினார். இலினாயிஸிலுள்ள வேண்டாலியாவில் நடந்த கூட்டத்திலிருந்து யாராவது இங்கு வந்திருக்கின்றீர்களா? அங்கு கர்த்தருடைய தூதன் கீழே வந்தபோது, இக்கூட்டத்திலுள்ள ஒரு மனிதன் அக்கட்டிடத்தில் இருந்தான். அவர் சொன்னார், “நீ தனிமைப்படுத்தப்பட்டுள்ளாய், அது நடந்தேறும்.. (ஒலிநாடாவில் காலியிடம்) 32நீங்கள், நான் இயேசுவின் ஊழியன் என்று விசுவாசிக்கின்றீர்களா?... பிதாவே? உங்கள் பக்கத்தில் நின்று கொண்டிருக் கிறாரா?... புற்றுநோய் என்னுடைய கரத்தின்மேல் அதிர்வு... அவளுடைய நாட்கள் மிகவும் குறைவு என நாங்கள் அறிந்திருக் கிறோம். இந்த உலகத்தில் அவ்வளவு நீண்ட காலம் வாழ்ந்ததைப் போல அல்லாமல் இந்த ஆத்துமாதானே இன்னொரு வாசஸ்தலத்திற்குள் கடந்து செல்ல வேண்டியதாயுள்ளது. வாழ்க்கையானது எல்லா ஜனங்களுக்கும் அருமையானதாகும். நாங்கள், நீர் இந்த பிற்பகலிலே அவளை குணமாக்குவீர் என்று விரும்புகிறோம். நீர் அப்படிச் செய்யவேண்டும் என்று அவள் விரும்புகிறாள். பிதாவே, நீர் அப்படிச் செய்யமாட்டீரா? இவைகளை உம்முடைய மகத்தான ஆவியானவர் கொண்டு வந்ததை நான் நினைவு கூருகிறேன். அந்த அறையிலே அந்த இரவு என்னைச் சந்தித்த அந்த தேவதூதன் இங்கு முன்பு, இப்போது வந்துள்ளார். இந்தப் பிசாசின் மேல் வல்லமை கொள்ள, உதவி செய்வார். புற்றுநோய் என அழைக்கப்படும் பிசாசே, ஜீவிக்கின்ற தேவ குமாரனாகிய இயேசுகிறிஸ்துவினால் அந்தப் பெண்மணியை விட்டுவிடும்படியாய் உனக்குக் கட்டளையிடுகிறேன். தேவகுமார னாகிய இயேசுகிறிஸ்துவின் மூலம், புற்றுநோயாகிய பிசாசே அந்தப் பெண்மணியை விட்டு வெளியே வா..?.....?. பரலோகப் பிதாவே, உம்முடைய சுகமாக்கும் வல்லமைக்காக நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். ஏனெனில், ஜெபத்திற்கு இப்போது பதிலளித்ததற்காக, உமக்கு நன்றி கூறுகிறோம். பிதாவே, இந்தப் பெண்மணி தன் ஜீவியகால மெல்லாம் உமக்கு சேவை புரியும்படியாய் நான் ஜெபிக்கிறேன். எல்லா மகிமையும், துதியும் இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உமக்கே உண்டாகட்டும், ஆமென்..........சரியா....?........... எல்லா அதிர்வும்...?. பெயர். இப்போது நினைவில் கொள்ளுங்கள், நீங்கள் இன்னும் சில மணிநேரங்களில் கடுமையாக சுகவீனப்படுவீர்கள். புற்றுநோய் மரித்ததின் காரணமாக மிகவும் சுகவீனமாவீர்கள். இதற்கு முன் என்னுடைய ஜெபக்கூட்டத்திற்கு வந்திருக்கிறீர்களா? சரி. உங்களுடைய புற்றுநோய் இப்போது மரித்துவிட்டது. நான் என்ன உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பதைக் கவனியுங்கள். இங்கு நான் எட்டு வாரங்கள் இருப்பேன். நான் சொன்னதை நீங்கள் கண்டு கொள்வீர்கள். அந்த சமயங்களில் நீங்கள் மேடைக்கு வந்து உங்கள் நிலைமையை சாட்சி பகரும்படியாக கேட்டுக் கொள்கிறேன். உங்களுடைய அந்தப் புற்றுநோய் உங்களை விட்டுப் போய்க் கொண்டிருக்கிறது. 33திருவாளர் அவர்களே..?.. பாருங்கள், உங்கள் ஆத்துமா அவருக்கு விலையேறப்பெற்றது. நீங்கள் நரம்பு சம்பந்த வியாதியைக் கொண்டுள்ளீர்கள், மிகவும் பயங்கரமான நரம்பு பிரச்சனையை உடையவராயிருக்கிறீர். அதுதான் உங்கள் வயிற்றில் தொந்தரவு செய்கிறது. மேலும் அது ஒருவிதமான அமிலத்தை வயிற்றில் ஏற்படுத்தும் ஒருநிலை. அதனால் எரிச்சலை வயிற்றில் கொண்டுவரும். ஒருவித உணர்ச்சியையும், மூச்சுதிணறக் கூடிய நிலைமையையும் கொண்டு வருகிறது. அது சரியா? அது எனக்குத் தெரியும் என்பதை நீங்கள் எவ்வாறு நினைக்கிறீர்கள்? அது சரியா, ஐயா. என்னுடைய ஜீவியத்தில் இதற்கு முன்பு நான் உங்களை இதற்கு முன்பு கண்டேதேயில்லை. ஆனால் அது அங்கேயுள்ளது. இங்கே இதைக் கவனிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். சரியாக இந்த கீழே...?... பாருங்கள் அந்த..?.. அவைகளைக் கவனியுங்கள். பாருங்கள் எப்படி அவை?... அது ஒரு அதிர்வின் நிலைமை....?... தொடங்கி விட்டதா?. வயிற்றுப்புண் எல்லா இடத்திலும்?.. இப்போது ..? அது நிற்க வேண்டுமானால் பாருங்கள்... நான் என்ன கூறுகிறேன் என்று. அவை, வெண்மையான சிறு புள்ளிகள், கவனித்துப் பாருங்கள் வருவதும் போவதுமாக உள்ளன. இப்போது, அது...?...சரி! இப்போது நான் என் கையை அப்படி விட்டு விட்டால், அவை நின்று போய் இவ்வாறு வெண்மையாக மாறிவிடும். அப்படியென்றால், நீங்கள் குணமாக்கப்பட்டுள்ளீர் கள். அப்படியில்லை யென்றால், அது அப்படியே அங்கு தங்கிவிடும். நீங்கள் தேவனுக்கு ஊழியம் செய்வீர்கள் இல்லையா? நீங்கள் ஜீவிக்க முடிந்தால்.... எங்கள் பரலோகப் பிதாவே, இங்குள்ள இந்த, பொத்தான்கள் உள்ள மேல்கோட்டை அணிந்திருக்கும் இந்த மனிதன் ஒரு ஊழியன் என்றும், நமக்கு அருமையாக உள்ள எல்லாவற்றிற்காகவும் போராடுகிறான். கர்த்தாவே, இந்த பெருந்தன்மையுள்ள ஆத்துமாவுக்காக நாங்கள் நன்றி கூறுகிறோம். அது... திருப்பி... கொண்டு வருவதால் இப்போது நான் ஜெபிக்கிறேன், அருமையான தேவனே, இந்த நாளிலே, இந்த மனிதனுக்கு அவன் போராடக்கூடிய, தேவையான உரிமைகளுக்காக மதத்தின் பேரிலான சுதந்திரத்திற்காக தமது மனச்சாட்சிக்கு உகந்த ஆராதிக்கக் கூடிய ஒரு இடத்திற்காகவும், நீர் இந்த இடத்தை ஆளுவதற்கும் அம்மனிதனை நீர் குணமாக்குவதன் மூலம் செய்யும்படி வேண்டுகிறேன், தேவனே...?.... (ஒலிநாடாவில் காலியிடம்) 34அதை வைத்து............ இப்போது நீர் அதை நிரூபித்தீர்...?... இப்போது விசுவாசம் வருகிறது...?... அருமையான தேவனே, நீரே உண்மையான தேவனுடைய குமாரன் என்பதை இம்மனிதன் அறிந்து கொள்ளட்டும்......... அவனது ஜீவியம்....... நான் உமது ஊழியக்காரனாக, அவனைக் கட்டி வைத்திருக்கும் அந்தப் பிசாசை எதிர்கொள்ள வேண்டிய வல்லமையை எனக்கு நீர் தரும்படி உதவி செய்யும். நசரேனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில், பிசாசே! இந்த பையனை விட்டுப் புறப்பட்டுப் போகும்படி உனக்குக் கட்டளையிடுகிறேன். அவனை விட்டு வெளியே வா! இதோ அவன் போகிறான். இப்போது இளம் வயதுடையவன்..?...... இப்போது அது இல்லை ............?... நீ புரிந்து கொண்டாயா? சிறுவனே? நான் இல்லை ?......சரி, இப்போது?... இப்போது இக்கூட்ட மக்களே, நீங்கள் உங்கள் தலையை ஒரு கணம் உயர்த்துங்கள் இன்னும் சில நொடிகளில், ஒரு பெரிய... உங்கள் கவனத்தை அழைக்கிறேன். இப்போது என் கை..?. அவளது கைகளில் மேல் வைக்கப் பட்டுள்ளது. இதன் மேல் சிறிது சிவப்பாக உள்ளது...? அந்த சிறிய வெண்மையான பருக்கள், குணமாக்கப்பட்டவுடன் நின்றுவிட்டு, எனது கைகளின் குறுக்கே வருகிறது. அது சரியா? ஐயா? என்னுடைய மற்ற கையானது சாதாரணமாகவும், நன்றாகவும் உள்ளது. நான் என் கையை அசைக்கவே இல்லை. எனது வயிற்றின் மீது, இவ்வாறு, இந்த நிலைமைகளுக்கிடையில், வைத்திருந்தேன். மேலேயோ அல்லது கீழேயோ அசைக்கவே இல்லை, எங்கே இருந்ததோ, அங்கேயே... மேலும் எனது கை முழுவதும் வெண்மையாகி விட்டது. இப்போது வெளியில் தெரியும்படி ஏதோ அங்கு நடந்துள்ளது. உங்கள் கண்களால் நீங்கள் காணும்படியாக ஏதோ ஒன்று நடந்துள்ளது. 35நீங்கள் ஒரு கிறிஸ்தவரா? நீங்கள் எப்போது இரட்சிக்கப்பட்டீர்கள் என்பது உங்களுக்கு நினைவிருக்கிறதா? நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும் தேவனை விசுவாசித்து அவரிடம் சென்றீரா? ஏனெனில் உங்களுக்கு ஏதோ ஒன்று நடந்துள்ளது. இல்லையா? முதலிலிருந்தே நீ சாட்சி கொடுத்திருக் கிறாய், சாத்தான் உன்னோடு பேசியிருக்கிறான், நீ சந்தேகப்படும் படியாகவும் அதிலிருந்து வெளியே வரும்படியும் அவன் முயற்சி செய்துள்ளான். ஆனால் நீ அதிலிருந்து வா. அதையே செய். நீ அப்படிச் செய்தால் உனது வயிற்றுக் கோளாறுகள் நீங்கிவிடும்..?... அந்த வயிற்றுப்புண் மற்ற எல்லாமுமே சுகமாகி விடும். நீ சுகமாக்கப்பட்டு விடுவாய்... அந்தோணி நியூ மெக்ஸிகோவுக்கு நீ திரும்பவும் வந்தால், அடுத்த சில வாரங்களில் மேடைக்கு வந்து சாட்சி கூறுவாயாக, உனக்கு என்ன நேர்ந்தது என்று ஜனங்கள் அறிந்து கொள்ளக் கூடும்? உன்னுடைய பெயர் என்ன? பார்னெட், தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக! சகோ.பார்னெட். இந்தப் பையனுடைய சாட்சியை கவனியுங்கள். இது முழுவதும் தெளிவாக உள்ளது. என்னுடைய கைகளை நான் அங்கு வைத்திருந்த நேரம் முழுவதும், அது எவ்வளவு வெண்மையாக அந்நேரம் முழுவதும் இருந்தது என்று கவனித்தீர்களா? நீர் சுகமாக்கப்பட்டீர். ஐயா, தேவன் உம்மை ஆசீர்வதிப்பார். நாம் அனைவரும், “கர்த்தருக்கு ஸ்தோத்திரம்,” என்று கூறுவோமா? உங்கள் தலைகளைத் தாழ்த்தித் துதிகளை ஏறெடுங்கள். 36உமது கையை என் கையின்மீது வையுங்கள். அது என்ன? என்ன? அது என்ன என்று என்னுடைய கைகளுடன் உணர்ந்து பாருங்கள். இப்போது கவனியுங்கள். மிகவும் மோசமான இரத்தப்போக் குடைய வயிற்றுப்புண் இருக்கிறது. நீரும்...கஷ்டப் படுகிறீரா?.. இப்போது பாருங்கள். எப்படி என்று?... இப்போது என் கைகளில் காணப்படுகிறது....?.... இங்கு ஒன்றைப் பாரும்... எப்படி என்று?... கவனியும். பயபக்தியோடு இரும். இயேசு வினால் குணமாக்கக்கூடும் என்று நீர் விசுவாசிக்கிறீரா?? எங்கள் பரலோகப் பிதாவே, சகல காரியங்களையும் அறிந்தவரே, குணமாக்கும் ஈவுகளை அறிந்தவரே, கல்வாரியில் மரித்து, உம்முடைய வல்லமையைக் கொண்டு வாரும். எலிசா சொன்னது போல, எலியா எடுக்கப்பட்ட பின்பு, “எலியாவின் தேவன் பேசட்டும்,” என்றது போல். கிறிஸ்துவாகிய தேவன், பேசட்டும். “இந்தப் பிசாசே, இந்த ஸ்திரீயை விட்டுப் போகும்படி உனக்குக் கட்டளை இடுகிறேன். நசரேயனாகிய இயேசுகிறிஸ்து வின் நாமத்தில் அவளை விட்டு வெளியே வா!”. உமது தலையை உயர்த்தும்படி விரும்புகிறேன் சகோதரியே! மேலே வெளிச்சத்தைப் பாருங்கள். இப்போது அதை உங்கள் கண்களினால் பாருங்கள். உங்களால் முடியவில்லையா? சிவப்புப் புள்ளிகள் மறைந்துவிடும். மறைகின்றன...? அது சரியா?.. இப்போது, நீங்கள் உங்கள் வீட்டிற்குப் போகலாம். நீங்கள் குணமாகி விடுவீர்கள். போய் மீதியான உங்களுடைய வாழ்நாட்கள் முழுவதும் தேவனைத் துதியுங்கள். தேவன் உங்களை முழுமையாக்குபடி செய்தார். அனுதினமும் தேவனை நீங்கள் துதியுங்கள். உங்களை நான் சந்திக்கும் போது, அவருக்காக சாட்சியாய் இருங்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பார். 37சகோதரியே, நீங்கள் நரம்புக் கோளாறு உடையவராயிருக் கிறீர்கள். மிகவும் தொந்தரவுடன், உண்மையாகவே கவலையா யிருக்கிறீர்கள். கவலையான உணர்வுகளைக் கொண்டுள்ளீர்கள். அதைப் போன்று இருக்கிறீர்கள். நல்லது, உங்களால் என்ன செய்வதென்றே தெரியாமல் இருக்கிறீர்கள். அது சரியா? சரி. அதிகமாக ஜெபிக்கும்படியாய் வந்துள்ளீர்கள். இல்லையா? சரி. நீங்கள் வீட்டிற்குச் சென்று இப்போதே சுகமாயிருப்பீர்கள். நான் உங்களது... வாழ்க்கை பற்றிக் கேட்கலாம். நீங்கள் அவருக்கு இதைச் செய்யுங்கள். சர்வ வல்லமையும் சர்வ வியாபியுமான தேவனே, எங்கள் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை மறுபடியும் மரித்தோரிலிருந்து கொண்டுவந்த பிதாவே... (ஒலிநாடாவில் காலியிடம் - ஆசி) தேவ குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அவளை விட்டு வெளியே வா. 38இப்போது, நான்..?... அவர்களை வெளியே... இப்போது, இப்போது அது அதிர்வுகள் மூலம் வரவில்லை . கையில் ஒரு அதிர்வுகளும் இல்லை. அவளுக்கு ஸ்திரீகளுக்குரிய சிறு தொந்தரவிருந்தது. அவள் வயிற்றில் சிறிய பை. அவளுக்கு வயிற்றில் தொந்தரவு இருந்தது. வயிற்றில் வாயு தொல்லை முதலான தொந்தரவுகள் இருந்தன. அது சரியா? ஸ்திரீயே? இப்போது, எனக்கு அது எப்படி தெரிந்தது? (அந்த ஸ்திரீ பதில் அளித்தாள், “அதிர்வுகள்”-ஆசி) அது சரி! பாருங்கள். நல்லது, இப்போது, இங்கே இதுதான் நடந்தது...அவளுக்கு உண்மையாகவே நரம்புப் பிரச்சனை. ஆனால், முக்கியமாக மன ரீதியான நிலைமையே உள்ளது. அது, பாருங்கள்... எதை விளைவிக்கிறது?... உணர்ச்சிகள். அவள் வருந்துகிறாள். அது ஒரு பழைய துண்டு போல முதலாவது காணப்பட்டது... ? மேலும் உனது மனதை நீ இழந்துவிடுவது போல உணர்கிறாய். அப்படியாகத்தானே நீ உணருகிறாய்? 39இப்போது, அது என்ன? இப்போது, அது சாதாரணமாக இல்லை. ஒரு மருத்துவர் அருகில் அமர்ந்திருந்தால்... ஒரு சாதாரண மனிதனுக்கு அப்படியிருக்க சாத்தியம் இல்லை. இப்போது, அது என்ன? அது சரீரத்தின் ஒரு வியாதியாக நிச்சயமாக அது இல்லை. ஆனால் எப்படி உணருகிறேன் என்றால் அவளைச் சுற்றிலும் ஒரு சோகமான உணர்வுகள் நீங்கள் எப்போதாவது ஒரு இருட்டான இடத்திற்குள் சென்றிருக்கிறீர்களா? ஒரு குருட்டுச் சந்துக்குள் அல்லது ஏதோ ஒன்று திடீரென்று ஏற்படக்கூடிய பயம்? அல்லது வேறு எங்காவது? எத்தனை பேருக்கு அந்தவிதமான பயத்திற்குள் சென்ற அனுபவம் இருக்கிறது? உங்களை பயப்படுத்தக்கூடிய ஏதோ ஒன்று அங்குள்ளது போல், அது சரியா? உங்களை பயமுறுத்தவே அங்கு எதுவோ இருப்பது போல். இந்த ஸ்திரீ அந்தவிதமான ஏதோ ஒன்று பிடித்திருந்த உணர்வுகளைக் கொண்டிருக்கத்தக் கதாக இருந்தாள். ஆனால் இப்போது அது போய்விட்டது. வெளியேற்றப்பட்டு விட்டது. இப்போது அந்த ஸ்திரீ வீட்டிற்குச் சென்று சாதாரணமாக இருக்கலாம். இப்போது நீங்கள் இங்கு அருகில் வசிக்கிறீர்களா, சகோதரியே? நியூ மெக்ஸிகோவில் சரி. அடுத்த நான்கு அல்லது ஐந்து வாரங்களில் நீங்கள் இங்கு இருப்பீர்களானால், இங்கு வந்து என்ன நடந்தது என்று பாருங்கள். இப்போது நீங்கள் உங்கள் பாதையில் சந்தோஷத்துடன் கடந்து செல்லுங்கள். நீங்கள் தேவனைத் துதிக்க ஆரம்பியுங்கள். “நன்றி அருமையான தேவனே” என்று கூறுங்கள். இப்போது அந்த இருளான உணர்வுகள் எல்லாம் போய்விடும். அது மீண்டும் உங்களிடத்தில் ஒருபோதும் இருக்காது. ஸ்திரீயே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாரக. 40இப்போது உங்கள் தலைகளை ஒரு கணம் தாழ்த்துங்கள் ...?... இப்போது இங்கே ஒரு ஏழை...?... இது உண்மையாகவே மோசமான ஒரு நிலைமை. நீங்கள் யாவரும் உங்கள் தலையை உயர்த்தும்படி வேண்டுகிறேன். என்னுடைய கரத்தை நீங்கள் பார்க்கும்படி கூறுகிறேன். இந்தக் கரத்தை இந்த இடத்தில், எங்கிருந்து என்று பார்க்க முடிகிறதா?... இந்த விளக்குகளின் அடியில் மீண்டும் கொண்டு வருகிறேன். இப்போது, பாருங்கள் என்னுடைய (ஒலிநாடாவில் காலியிடம்) சரீரத்தில் அவருக்கு ஒரு கட்டி உள்ளது. இங்கே இந்தக் கையைப் பாருங்கள், எவ்வளவு வெண்மையாக உள்ளது. நீங்கள் பாருங்கள். இந்தக் கையின் மீது, அதைப் போன்று அழுத்துகிறேன். பாருங்கள்? என் கையில் வெண்மைப் புள்ளிகளாக உள்ளது, சிவப்பு நிறம் தளர்கிறது. மிகவும் பரிதாபமான சிறியவன், உனக்கு என்ன கோளாறு என்று மருத்துவர் கூறினார்? கட்டி? சுரப்பியில் கட்டி. சரி. இப்போது, நிச்சயமாக இது அறுவை சிகிச்சைக்கு அப்பாற்பட்டது. மேலும் நீங்கள் இந்தப் பையனுக்கு தேவனால் சுகம் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு, விசுவாசிக்கிறீர்களா? அது ஒன்றுதான் உங்கள் நம்பிக்கை, இல்லையா? உங்களுடைய ஒரே நம்பிக்கை? சரி, உங்கள் தலைகளைத் தாழ்த்துங்கள் நண்பர்களே, நீங்கள் கவனிக்க வேண்டுமென விரும்புகிறேன். நான் இந்தவிதமாக, முன்பு செய்தது போல என் கையை பிடிக்கிறேன். இப்போது தலை வணங்குங்கள். அது போய்விடும். என்று நான் கூறவில்லை. நான் தேவனிடம் கேட்பது மட்டும் செய்வேன். அவ்வளவுதான். 41அன்பார்ந்த பரலோகப் பிதாவே, இது என்னுடைய சிறு பையன், சிறிய பில்லிபால் என்று நினைத்துக் கொள்கிறேன். நின்று கொண்டிருக்கிற இச்சிறுவன் இப்போது இந்த வாழ்க்கையில் வாழ்வதற்கு உம்மைத் தவிர வேறு வழியில்லை. இதற்கு மேல் எதுவும் செய்ய இயலாது. ஆனால் விசுவாசம் இந்த உலகத்தைச் சுற்றியுள்ளது...நீர், “நீ விசுவாசித்தால், என்னால் முடியும்,” என்று சொன்னீர். அருமையான தேவனே, இன்னுமாக எப்படி உம்மிடத்தில் நேர்மையாயிருப்பது என்று எனக்குத் தெரியவில்லை. இந்த சிறு பையன் மரித்துப் போகப்போகிறான். பிதாவே, மருத்துவர்கள் இனி எதுவும் செய்யமுடியாது. மேலும், அவன் தாய் இங்கு இரக்கத்திற்காக நின்று கொண்டிருக்கிறாள், பிதாவே, இது அவளது கடைசி வாய்ப்பு என அவள் அறிந்திருக் கிறாள். இறுதியாக அவள் செய்யக்கூடியது என்னவெனில், இந்தப் பையனை இங்கு கூட்டி வந்து ஜெபிப்பது மட்டுமே. தேவனே, இரக்கமாயிரும், செய்வீரா பிதாவே? இந்தச் சிறு பையனை தொந்தரவு செய்கிற இந்தப் பிசாசை ஜனங்களுக்கு அதிர்வுகளினால் காண்பித்தேன். தேவனே, இவனது தகப்பன் அல்லது தாய் அல்லது ஏதோ ஒருவர் பாவம் செய்திருப்பர். எப்படியாவது அதை மன்னியும். தலைமுறையில் யாராவது எங்காவது பாவம் செய்திருப்பர். ஓ, கிறிஸ்துவே, என்னை நம்பும், அதை மன்னியும். இந்தப் பிசாசின்மீது உம்முடைய வல்லமையை அருளும் என்று ஜெபிக்கிறேன். இதோ, கட்டி எனப்படும் பிசாசே, இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உன்னை சந்திக்கும்படி வந்திருக்கிறேன். இன்றைய தினத்திலே, நீ இவனை விட்டுவிடு. அவனை விட்டு வெளியே வா. எல்லா வரங்களையுமுடைய சர்வவல்ல தேவனே, எனக்கு உதவி செய்யும். அருமையான தேவனே. (ஒலிநாடாவில் காலியிடம்) 42அவனுடைய தேசம் முழுவதும் தேவனை அறிந்து கொள்ளப் பட்டும் - நீரே தேவன், நான் உமது ஊழியன் என்பதை அறியட்டும். பிசாசே, உன்னை சந்திக்க இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் நான் வந்திருக்கிறேன். ஜீவிக்கின்ற, தேவகுமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் இந்தக் குழந்தையை விட்டு வெளியே வா என நான் கட்டளையிடுகிறேன். சரி! கூட்டத்தாரே, உங்கள் தலைகளை உயர்த்தலாம். இப்போது நீங்கள் பாருங்கள், என் கையில் இருந்த கவனியுங்கள், சிவப்பு நிறம் என்னவானது.. இப்போது, கவனியுங்கள். அது வெண்மையாக மாறிக்கொண்டிருக்கிறது. அச்சிவப்புப் போவதை காணமுடிகிறதா? கூட்டத்தாரில் யாரேனும் அது வெளியேறுவதைக் காண்கிறீர்களா? அது அங்கே பூரணமாகவும், சாதாரணமாயும் வெண்மையாயும் உள்ளது. அதிர்வு அல்ல, அசாதாரணமும் அல்ல. ஸ்திரீயே, நீ எங்கே வசிக்கிறாய்? இங்கு ஃபோனிக்ஸிலா? இவனை மீண்டும் அடுத்த வாரம் இங்கு கூட்டிக்கொண்டு வாருங்கள். அவனுக்கு என்ன நேர்ந்தது என்று அறிய விரும்புகிறேன். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. 43நாம், “கர்த்தருக்கு நன்றி”, கூறவேண்டும் இல்லையா? இவைகள் அல்ல. நண்பர்களே, இவைகளையெல்லாம் நீங்கள் கவனிக்கவில்லை. ஆனால் இங்கே - அவைகள் இங்கு இருக்கின்ற. அவ்வாறாகவே அவைகள் நிகழ்கின்றன. இப்போது, நம்புங்கள், ஒவ்வொருவரும் உங்கள் தலைகளைத் தாழ்த்தியிருங்கள். அருமை பிதாவே, கக்கதண்டம் வைத்து நின்று கொண்டிருக்கும் இந்த சகோதரனுக்கு ஒரு கால் வெட்டப்பட்டு உள்ளது. கடந்த நிலைமையின் பேரில் சாத்தான் அவனை மிகவும் துன்புறுத்திக் கொண்டிருக்கிறான். ஆனால், குணமாக்க நீர் இங்கு இருக்கிறீர். இவனைச் சரியாக்க நீர் இங்கே இருக்கிறீர். தேவனே தன்னுடைய கக்கதண்டத்தை வைத்துக் கொண்டு நொண்டியாக உள்ளான். பிதாவே, இன்னொரு காலை நீர் எழுப்ப முடியும்...? அவன் சரியானவனாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் நீர், “உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைப் பார்க்கிலும் உன் அவயங்களில் ஒரு காலுடன் அல்லது ஒரு கண்ணுடன் இருப்பது நலம்” என்று கூறியிருக்கிறீர், ஓ, பிதாவே! அவன் இப்போது உம்முடைய ஊழியனாகி உள்ளான், கேட்கிறதா? சாத்தானே, இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் இவனை விட்டுவிடு. (ஒலிநாடாவில் காலியிடம்) தேவன் உங்களை ஆசீர்வதிப்பார். ஐயா, நீங்கள் ஃபோனிக்ஸில் இங்குதான் நீர் வசிக்கிறீர்? அதிர்வுகள் நின்றுவிட்டன, நீர் திரும்பி வரமாட்டீரா? மேடைக்கு வந்து சாட்சி கூறுங்கள். எனவே ஜனங்கள் இதைப் பார்க்கக்கூடும். 44ஓ, இது உங்களுடைய மகன், என்னுடைய கரத்தைப் பாருங்கள். நீர் பாரும் இதை...?...சிறுவனே, நீ நம்புகிறாயா? நான் இயேசுவிடம் கேட்டால், அவர் உன்னை குணமாக்குவார் என்று. நீ சரியாகி விடுவாய், நீ.?... நம்புகிறாயா? நீ முடவனாயிருக் கிறாய். நீ குணமானவுடன் எல்லாச் சிறு குழந்தைகளிடமும் இயேசு உன்னை சுகமாக்கினார் என்று கூறுவாயா? மனிதத்து வத்தில் எல்லாம் செய்யப்பட்டது. உனக்கும் இல்லையா? தேவன் இப்போது உன்னை ஆசீர்வதிப்பார். அங்கு அவன் வருகிறான். சிறு பையன்...?... நான் இதில் பேசுகிறேன்.....?...தாயே, நீங்கள் கவனிக்க வேண்டுகிறேன். இது உடல் ரீதியான இருளாயிருக்கிறது. இப்போது பாருங்கள், எங்கே என் கை என்று...?... சர்வ வல்லமையுள்ள தேவனே, நித்திய ஜீவனின் ஆக்கியோனே, ஒவ்வொரு நல்ல வரங்களையும் தருபவரே, இந்தச் சிறுவனின் மீது உமது ஆசிகளை வழங்குவீராக. இனிமேல் நன்றாக இருப்பதற்கு அல்லது சாதாரணமாக அல்லது ஏதாவது செய்ய வாய்ப்புகள் இல்லை என்று உணருகிறோம். அவனது தாய் அவனை இங்கு கூட்டிக்கொண்டு வந்துள்ளாள். ஓ, கிறிஸ்துவே, இரக்கமாயிரும். இதுவே கடைசி நம்பிக்கையின் நெருக்க மாயுள்ளது. நீர் இரக்கமாயிரும், இல்லையா பிதாவே? நாங்கள் உணருகிறோம். பிதாவே, விசுவாசமானது நம்பப்படுகிற வைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாய் இருக்கிறது. இச்சிறுவன் தனது மருத்துவரிடம் திரும்பிச் செல்லட்டும், “ஓ என்னே! இவனுக்கு என்ன நேர்ந்தது? இவன் குணமடைந் துள்ளான்” என மருத்துவர் சொல்லட்டும் தேவனே மரணத்திலிருந்து ஜீவனைத் தாரும். சாத்தானே, குழந்தையை விட்டுவிடு, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில், நான் உனக்கு ஆணையிடுகிறேன், சாத்தானே, அதோ அவன் போய்க் கொண்டிருக்கிறான்...?... இப்போது, நீங்கள் பாருங்கள், என் கைக்கு என்ன நேர்ந்ததென்று மின்னிசோட்டா, மின்னியபோலிஸிலிருந்து வந்திருக்கிறேன். கூட்டத்தாரே உங்கள் தலைகளை உயர்த்துங்கள், மருத்துவர்கள்...மேயோவில் உள்ளதா? மின்னசோட்டா பல்கலைக்கழகம்? மருத்துவர்கள் கைவிட்டு விட்டனர். அவனைக் குறித்து எந்த நம்பிக்கையும் இல்லை. அவன் சுகமாக்கப் படும்படிக்கு, அவனை இங்கு ஃபோனிக்ஸுக்கு அவள் கூட்டிக்கொண்டு வந்துள்ளாள். நான் இந்த மேடையில் நிற்பது எவ்வளவு நிச்சயமோ, அவ்வளவாய் சர்வ வல்லமையுள்ள தேவன் இப்பையனின் சரீரத்தைத் தொட்டுள்ளார்...? இப்போது பாருங்கள் சகோதரியே, என் கை சிவப்பு நிறமாய், சில இடங்களில், முழுவதும் தழும்பாய் சில கணங்களுக்கு முன் இருந்தது, அது சரியா? அதே நிலையில் என் கை இப்போது உள்ளதா ஸ்திரீயே? அதே நிலையில் என் கை இப்போது உள்ளதா? பெண்ணே? அது சிவப்பிலிருந்து மாறி நுரைபோல் வெண்மையானதை நீங்கள் கவனித்தீர்களா? நீங்கள் அதைப் பார்த்தீர்களா? சரி...?. சிறு பையனே, நீ மின்ன சோட்டா வுக்குக் போகலாம். நீ சாதாரணமான மனிதனாய் வாழப் போகிறாய் என்று நம்புகிறேன். “கர்த்தருக்கு ஸ்தோத்திரம்”. உமது ஊழியக்காரன். நான் உமக்கு நன்றியுடையவனாய் இருக்கிறேன். அருமை தேவனே, இந்த இந்த ஜனங்களை உம்மிடம் கொண்டு வருவதில் உம்முடைய சித்தத்திற்குப் புறம்பே ஒரு வருடத்திற்கு முன்பாக இருந்த அந்த உணர்வுகள். இதுதான் உம்முடைய தெய்வீகச் சித்தம் என்பதை இந்த நாளின் பிற்கலிலே நீர் காண்பித்திருக்கிறீர், “எனது மனைவியை சுகப் படுத்தும்”, “என் மகளை சுகமாக்கும்” என்பதற்கு வருந்துகிறேன். தேவனே, இப்போதிலிருந்து உம்முடைய உதவியின் மூலம், நீர் என்ன செய்யச் சொல்கிறீரோ அதை நான் பின்பற்றச் செய்யும். கர்த்தாவே, இதை அங்கீகரியும். மனிதன் தான் நினைப்பது சிறந்தது என்பதை செய்யட்டும். பிதாவே, நான் உம்முடைய வழிகாட்டுதலைப் பின்பற்றுவேன். இப்போது, அந்த ஸ்திரீயிடம் நான் செல்ல உதவி செய்யும். பிதாவே, சாந்தமுள்ள ஆவியினால், அவளிடத்திலுள்ள இந்த சக்தியை கடிந்து கொள்கிறேன். ஆபாசமான பிசாசே, இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் இந்த ஸ்திரீயை விட்டு வெளியே வா. 45ஓ, கர்த்தருக்கு ஸ்தோத்திரம், அவரை நேசிக் கிறாயா...?... சரி. உங்கள் தலைகளைத் தாழ்த்துங்கள். எங்கிருந்து வருகிறாய்...?... கலிஃபோர்னியாவா...?... அநேக வருடங்கள்...நான் சொல்வது கேட்கிறதா...சரி... இப்போது கேட்கிறதா?... அந்த ஸ்திரீயைப் போல் தன்னை அர்ப்பணிக்க முடிவெடுத்த அந்த பெண்ணைப் போல... அது சரியா?. நீ ஸ்பெயின் நாட்டைச் சார்ந்தவள் ஆச்சரியமில்லை . நீ விசுவாசிக்கிறாய்..?........... இதுவரை எதுவொன்றும் தோல்வியடைந்ததை நான் காணவில்லை. அது சரி. நல்லது அது மிகவும் மகத்தானது, வீட்டுக்குச் சென்று மகிழ்ந்து களிகூரு. தேவன் உங்களை ஆசீர்வதிப்பார் சகோதரியே..?... தேவன் உங்களை ஆசீர்வதிப்பார். சகோதரியே இப்போது நீங்கள், “கர்த்தருக்கு ஸ்தோத்திரம்”, என்று கூறலாம். இப்போது கவனியுங்கள், கவனியுங்கள், சிறிது கவனியுங்கள். இப்போது, மனிதன் சிலவற்றை முயற்சி செய்வதற்கும், தேவன் அதை செய்து முடிப்பதற்கும் உள்ள வித்தியாசத்தைக் கவனியுங்கள். இப்போது உங்கள் தலைகளைத் தாழ்த்துங்கள்?... இந்த பெண்மணி செவிடாயிருக்கிறாள், முழுமையாக செவிடு..?.. சர்வ வல்லமையுள்ள தேவனே, நீர் இரக்கமாயிருக்கும்படி உம்மிடம் ஜெபிக்கிறேன். இங்கு வந்திருக்கும் இந்த பெண்மணி இப்போது இதிலிருந்து குணமடையட்டும்...?. இங்கே நின்றிருக்கும் இவள் செவிடு. மேலும் பிதாவே, இப்போது நீர் இங்கே அருகில் இருக்கிறீர், உம்முடைய ஆசீர்வாதங்கள் என்மேல் புன்னகை செய்கிறது, இப்போது இந்த சகோதரி குணமாக்க முடியும். ஓ, நித்தியத்தின் தேவனே, இரக்கமாயிரும். இப்போது மன்னித்து, மறந்தருளும். பிதாவே, எங்கள் தவறுகளுக்காக நாங்கள் ஜெபித்து அதின் மத்தியில் அநேக அவிசுவாசிகள் உம்முடைய வல்லமையை உற்றுநோக்கத்தக்கதாக, உம்மிடம் ஜெபிக்கிறோம். ஜனங்களுக்குக் காண்பிக்க?. குணமாகாமலிருப்பதில் ஒருபோதும். அவர்கள் குணமாக்கப்பட வேண்டும்...?... விசுவாசித்தலின் மூலம் உம்மால் மட்டும். உம்மால் ஜனங்கள் இரட்சிக்கப்படாமலிருக்க முடியுமா? அதனால், நீர் அவர்களை இரட்சியும். நீர் அவர்களை இரட்சியும், ஏனெனில் அவர்கள் உம்மை விசுவாசிக்கிறார்கள். ஓ கிறிஸ்துவே, இப்போது, நீர் இந்த ஸ்திரீயைக் குணப்படுத்த நீர் எனக்கு சக்தியைத் தரும்படி ஜெபிக்கிறேன். செவிட்டின் ஆவியே, இந்த ஸ்திரீயை விட்டு வெளியேறு. இயேசுகிறிஸ்துவின் நாமத்தில், அவளை விட்டு வெளியே வா. உனக்குக் கேட்கிறதா? நான் சொல்வது கேட்கிறதா? கேட்க முடிகிறதா?.... 46இப்போது சரி, இங்கேயிருக்கும் இந்த சிறுபையனுக்காக ஜெபிக்க விரும்புகிறோம். பிதாவே இச்சிறுவன் மீது என் கைகளை வைக்கிறேன், பிதாவே, உம்முடைய குமாரன் நசரேயனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் நான் ஜெபிக்கிறேன் ஆமென். நீங்கள் இப்போது விசுவாசிக்கிறீர்களா? சகோதரி....?.... பிதாவே, உம்முடைய ஊழியக்காரன் ஜெபிக்கும்படி இந்த சிறு பெண்ணை இங்கு ஏற்பாடு செய்துள்ளார்கள். நான் அவள் மீது கைகளை வைக்கிறேன். பிதாவே, நாங்கள் அவ்வாறு செய்யும்படி எங்களுக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறீர். விசுவாச முள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும், தேவன் அவர்களை எழுப்புவார் என்று நீர் சொல்லியிருக்கிறீர். எனவே, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நீர் குணமாக்குவீர் என்று ஜெபிக்கிறேன், ஆமென். நீர் விசுவாசிக்கிறீரா? சகோதரியே? தேவன் உங்களை ஆசீர்வதிக்கிறார். கலிபோர்னியாவில் இருந்து வந்திருக்கும் என் சகோதரிக்காக, அவளது பொதுவான நிலைமைக்காக நான் ஜெபிக்கிறேன். நான் இப்போது ஜெபிக்கிறேன். பிதாவே..?... நீர் செய்யும்படி நான் ஜெபிக்கிறேன். நான் என் கைகளை வைக்கிறேன்...... ஓ, பிதாவாகிய தேவனே, நீர் அவளுடைய இந்தத் தொந்தரவிலிருந்து சுகமளிக்கும்படி ஜெபிக்கிறேன். அவளுக்கு...?... நான் அவள் மீது கைகளை வைக்கிறேன்......... இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் நீர் சுகம் அளிப்பீர் என்று நான் ஜெபிக்கிறேன். ஓ, பிதாவே, இந்த மனிதனுக்கு, அவனுடைய தொந்தரவிலிருந்து சுகம் அளிப்பீராக... நீர் அவனை குணமாக்கும்படி ஜெபிக்கிறோம்...?.. உம்முடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் நான் இந்த ஆசீர்வாதத்தைக் கேட்கிறேன் ஆமென். ஐயா நம்புகிறீரா? சரி. தேவனுடைய குமாரனே ஓ இயேசுவே, நீர் இந்த சிறு பையனை சுகமாக்கும்படி ஜெபிக்கிறேன். அவனை சுகப்படுத்தும், பிதாவே, அவனுக்கு தொற்றுநோய் பிடித்திருக்கிறது என்று அவர்கள் சொல்லு கிறார்கள், நீர் அவனை சுகமாக்கும் என்று நான் ஜெபிக்கிறேன். இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் ஆமென். சிறுவனே, தேவன் உன்னை ஆசீர்வதிக்கிறார். 47பிதாவே, என்னுடைய சகோதரனை நீர் சுகமாக்கும்படி ஜெபிக்கிறேன். இதை இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் நான் கேட்கிறேன் ஆமென். ஓ, தேவனே இந்த மனுஷனை சுகமாக்கும்படியாக நான் ஜெபிக்கிறேன். ஜெபிக்கும்படியாய் இந்த பிற்பகலிலே இவன் இங்கு கொண்டு வரப்பட்டுள்ளான். நான் கேட்கிறேன் தேவனே, நான் கைகளை வைக்கும் போது நீர் இச்சிறுவனை சுகமாக்கி, அவனைச் சரிபடுத்தும், உம்முடைய குமாரன் இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் ஆமென்...? பிதாவே, என் சகோதரனை சுகமாக்கி, சரிப்படுத்தும்படியாய் நான் ஜெபிக்கிறேன். இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் நான் கேட்கிறேன் ஆமென். ஓ தேவனே, நீர் இம்மனிதனை குணமாக்கும்படி ஜெபிக்கிறேன். (ஒலிநாடாவில் காலியிடம்) அவனை சரிப்படுத்தும்படி இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் நான் ஜெபிக்கிறேன், ஆமென். தேவனே, இந்தப் பெண்மணியை சுகமாக்கி, அவளை சரிப்படுத்தும்படியாய் நான் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறேன். ஓ தேவனே, நீர் என் சகோதரியை குணமாக்குவீர், அவளை சரியாக்குவீர் பிதாவே, இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் நான் கேட்கிறேன், ஆமென். தேவன் ஆசீர்வதிப்பாராக..?... உன்னிடத்தில் என்ன தவறு இருக்கிறது?...?.. இல்லை என் கையைப் பாருங்கள். எல்லோரும் மிகவும் பயபக்தியாய் இருங்கள். சில கணங்கள், நான் உங்களுடன் பேச விரும்புகிறேன். போய்விடாதீர்கள், இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இப்போது போய்விடாதீர்கள். இன்னும் இரண்டே நிமிடங்கள்...? தேவனே, நீர் என்னுடைய சகோதரியை சுகமாக்குவீர்? கர்த்தாவே, அவளை சுகமாக்கும். அவளை சுகமாக்கும். கிறிஸ்துவின் நாமத்தில் நான் ஜெபிக்கிறேன். தேவனே, நீர் சுகமாக்குவீர், உமது குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினால், தேவனே, நீர் என் சகோதரனை சுகமாக்கும்படி யாய் நான் ஜெபிக்கிறேன். அந்த நாமத்தினால் தேவனே, என் சகோதரியை சுகமாக்கும், இயேசுகிறிஸ்துவின் நாமத்தில், நீர் அவளை குணமாக்கும்படி ஜெபிக்கிறேன். தேவனே, எனது சகோதரனை குணமாக்கும்படியாய் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கேட்கிறேன். தேவனே என் சகோதரனுக்கு சுகத்தை அளியும், இயேசுகிறிஸ்துவின் ?.. தேவனே என் சகோதரனுக்கு சுகம் அளியும், தேவனே என் சகோதரிக்கு சுகம் அளியும், இயேசுவின்...? நீங்கள் எப்போதாவது...?... வியாதியில் இருந்திருக்கிறீர் களா?.... குறைந்த பட்சம், அரை டஜன் அல்லது இரண்டு, அதற்கும் அதிகமான டஜன் குறிப்பிடத்தக்க அளவு அங்கே நடத்தப்படும். அது சரியா? சரி என்றால் உங்கள் கையை உயர்த்துங்கள். சரியாக இருந்தால், அது சரி. இப்போது, அது என்ன? நான் தொடக்கத்திலேயே சொன்னேன், சகோதரன். கிட்சன் வழக்கமாக, கீழே சென்று, வியாதியுள்ளவர்களையும் முடமானவர்களையும் அதிக எண்ணிக்கையில் கூட்டிக்கொண்டு வந்து, முதல் வரிசையில் படுக்க வைத்து விடுவார். ஏனெனில் விசுவாசிக்கக்கூடிய நம்பிக்கையை ஜனங்கள் பெற்றுக்கொள்ளவும், அற்புதங்கள் நிகழ்த்தப் படுவதைப் பார்க்கச் செய்யவும். அவர் அவ்வாறு செய்வார். அது சரியா? நீங்கள் எல்லோரும் அதை ஜெபக்கூட்டத்தில் கண்டீர்கள், அதனால்தான், ஜனங்கள் முண்டியடித்துக் கொண்டு முதல் வரிசைக்கு வர முயற்சி செய்வார்கள். யாவருக்கும் முன்பாக இங்கு உங்கள் யாவர் முன்புறம், ஏறக்குறைய இரண்டாயிரம் ஜனங்கள் அல்லது அதற்கு பக்கத்தில் அல்லது ஏறக்குறைய பதினைந்து, பதினெட்டு நூறு என்று யூகிக்கிறேன், நான் தேவனிடத்தில் வாக்குரைத்தேன். 48இப்போது, பாருங்கள், தேவனுக்கு நான் வாக்களித்துள்ளேன். இந்த பிற்பகலில் இந்த அற்புதங்களையெல்லாம் நடப்பிக்க அது தேவனுடைய சித்தமானால் எனக்கு முன்பு ஒவ்வொருவரும் வரட்டும். அது சரியா? “ஆமென்” என்று சொல்லச்சொல்லுங்கள் என்பதாக நான் சொன்னதாக எத்தனை பேர் நினைவில் வைத்திருக்கிறீரக்கள்? நான் அவரிடம், ஒருவேளை அது அவருடைய சித்தம் இல்லை என்றால், இங்கிருந்தே எனக்குத் தெரியும், இப்போதிலிருந்து ஒருவருக்கும், எந்த அற்புத வரிசைகளில் அனுமதிக்கப்படாமல், முதலில் எனக்கு முன்பதாக, இக்கட்டிட அற்புத வரிசை முன்பதாக வராது. எத்தனை பேர் நான் சொன்னதைக் கேட்டீர்கள்? “ஆமென்” என்று சொல்லுங்கள். இந்த பிற்பகலில், ஒரு மனிதனைத் தவிர வேறுயாரும் அது சுகமாக்கப்பட்ட ஒரு செவிடனின் சமயமாக இருந்து அவர்கள் அற்புதங்கள் நடக்கும் வரிசையை இழுத்துக் கொண்டார்கள். யாரோ ஒருவர் அதை இழுத்துக் கொண்டார். அது சரியா? அதை என் வாழ்க்கையில் ஒருபோதும், இதற்கு முன்பு நான் கண்டதில்லை. இப்போது சர்வ வல்லமையுள்ள தேவனின் உதவியோடு, என்னிடம் யார் ஒருவரையும், கூட்டிக் கொண்டு வந்து, “இவனை சுகமாக்கும்” என்று கூறவேண்டாம் என்று விரும்புகிறேன். ஒருபோதும் இல்லை. தேவன் இன்றைய தினம் அதை அனுமதித்துள்ளார். மேலும், இல்லினாய்ஸில் உள்ள வேண்டாலி யாவில் அந்தக் காலைப் பொழுதில், மக்களுக்கு முன்பதாக, தேவனுடைய தூதன் என்னைச் சந்தித்து ஜனங்களின் மத்தியில் சாட்சி கூறியதைக் குறித்து நான் பேசியதை எத்தனை பேர் கேட்டிருக்கிறீர்கள்? அந்த அறையில், மூடுபனியில் பெரிய வானவில்லில் நின்று கொண்டு, என்னிடம் அற்புதங்களை நிகழ்த்தக் கூடிய சுகமளிக்கும் வரத்திற்கு என்னை மிகவும் அதிகமாக உட்படுத்திக் கொள்ளும்படி கூறினார். எத்தனை நபர்கள் நான் அப்படிப் பேசியதைக் கேட்டீர்கள்? சரி, நான் அவ்வாறே தொடர்ந்து சென்றேன். ஏனெனில் ஜனங்களை என்னிடம் கொண்டு வந்து, “நீர் இதை, அதை பொறுப்பு எடுத்துக் கொள்ளும்”, என்று கூறுவர். நான் என் வாழ்க்கை முழுவதிலும் ஒருபோதும் இந்த பிற்பகல் வரையும், எனக்கு முன்பு வைக்கப்பட்ட சுகமளித்தலின் வரத்தினால் சுகமாக்கப்படாத எதையுமே நான் கண்டதில்லை. ஆனால் நான் தேவனுடைய சித்தத்தைச் செய்திருக்கிறேன் என்பதில் மட்டும் நிச்சயமுள்ளவனாக இருக்க விரும்புகிறேன். அது அப்படியே இன்றும் நிகழ்ந்தது, தேவன் அதை அறிவார். நான் இங்கு வந்து வியாதியஸ்தரிடத்தில் பிரசங்கம் பண்ணினேன் என்பதை நான் ஒரு மாய்மாலக்காரனாக இருந்து சொல்லவில்லை என்பதை தேவன் தாமே அறிந்திருக்கிறார். ஆனால் பிலேயாமிடம் அவர்களுடைய மனிதர்கள், “வாருங்கள், எவ்வாறேனும் போங்கள். இந்த ஜனங்களை சபியுங்கள், இந்த ஜனங்களை சபியுங்கள்” என்று சொன்னார்கள். மேலும் கடந்த இரவு, நான் உங்களிடம் சொன்னேன். கடைசிக்கும் முந்தைய இரவு நான் இருந்த அறையில், தேவதூதன் நின்றிருந்தார், அது நினைவிருக்கிறதா? அந்த சாட்சி எனக்குப் போதும் ஜனங்களே, யாவரும் மற்றவரை இழுத்து எழுப்பி, “இவரை சுகப்படுத்தும், அவரை சுகப்படுத்தும்” என்று சொல்வது தேவையில்லை. தேவனே சாட்சியாக இருக்கட்டும்..?... சரி. இப்போது அது உண்மை. 49இப்போது, அடுத்த ஞாயிறன்று, நாம் எப்பொழுதும் செய்வது போல, சரியாக வரிசையை அமைக்கப்போகிறோம். இப்பொழுது பாருங்கள், இன்றைய ஜெபக்கூட்டம் முழுவதிலும், அநேக செவிடான ஜனங்கள் இங்கு வந்திருந்தனர். அந்த செவிடான ஜனங்களை, நான் கூப்பிட்டப் பின்பு கூட அந்த அதிர்வலைகள் போகவேயில்லை. அது சரி. அது போய்விடும். பிறகு அவர்களைப் பிடித்து திரும்பவும் வாருங்கள், அது ஒரு சாட்சியாகும். இப்போது, இங்கிருந்த செவிடும், ஊமையுமாயிருந்த ஜனங்கள், அடுத்த ஞாயிறன்று சாதாரண ஜெபவரிசையில் வரும்படி நான் விரும்புகிறேன். சாதாரணமாக இந்த வரிசையில் வாருங்கள். ஒருவருக்கும் தெரியவில்லை. ஞாபகம் கொள்ளுங்கள், ஒருவரும் என்னிடம் வந்து ஏதாவது அற்புதங்கள் இன்னும் அதிகமாக செய்யுங்கள் எனச் சொல்ல வேண்டாம். பாருங்கள். இப்போது, இந்த நேரம் வரை தேவன் அதை அனுமதித்துள்ளார். நீங்கள் ஒவ்வொருவரும் இதற்குச் சாட்சி யாயிருக்கிறீர்கள், அது சரியா? “ஆமென்” என்று சொல்லுங்கள். அவர் அற்புதங்களைத் தொடர்ந்து நிகழ்த்துவார், ஆனால் அற்புதங்களை கொண்டு வருபவர்களை அல்ல. தேவனுடைய ஆவியினால் நடத்தப்படவே நான் விரும்புகிறேன். நான் இதிலிருந்து என்ன செய்வது என்பதன் பேரில், சகோதரன்.கிட்சன் அல்லது யாராயிருந்தாலும், என்ன கூறினாலும் அது குறித்து எனக்குக் கவலையில்லை. சர்வ வல்லமையுள்ள தேவனுக்கும், எனக்கும் இதுவே போதுமான சாட்சியாகும். நான் சரி என்று நீங்கள் நினைக்கிறீர்களா? ஆம் என்றால் உங்கள் கரங்களை உயர்த் துங்கள்...?...நான் இப்பொழுது காரியங்களை ஒழுங்குப் படுத்தும்படியாக வரிசைக்கு வரலாம் என்று நினைக்கிறேன். சர்வ வல்லமையுள்ள தேவன்தாமே ஆசீர்வதிப்பாராக, இரக்கம் கொள்வாராக. 50இப்போது, அதே ஜனங்களை ஜெபவரிசைக்கு அடுத்த வாரம் அல்லது அடுத்த வரிசையில் வரும்படி கூட்டிக்கொண்டு வாருங்கள். அவர்கள் சுகமாக்கப் படுவார்கள், ஆனால் யாரும் என்னிடம், “இங்கே வந்து இவரை சுகப்படுத்துங்கள், அங்கே அவரை சுகப்படுத்துங்கள்” என்று ஒருபோதும் கேட்காதீர்கள். பரிசுத்த ஆவியானவர் தாமே யாரிடம் நிற்க வேண்டும், யாரிடம் நிற்கக் கூடாது என்று கூற, நான் விட்டுவிடுவேன் அது சரியா? ஆமென். உங்களுக்கு விருப்பமானால் நான் அவரிடம் பேசும்போது, இப்போது நாம் அனைவரும் நம் தலைகளைத் தாழ்த்துவோமாக. ஒரு கணம், பயபக்தியோடு இருங்கள் நண்பனே, பயபக்தியில்லாமல் இருக்க வேண்டாம்...?... பிதாவே, இன்று நான் உமக்கு நன்றி கூறுகிறேன். ஏனெனில், உமது மகத்தான கரங்களை நான் நம்பச் செய்தீர். அந்த இரவு உம்முடைய தூதன் ஏன் என் அறைக்கு வந்தார் என்று இப்போது எனக்குப் புரிந்துவிட்டது. அவர் ஒரு சாட்சி. தேவனே, நான் தவறாயிருந்திருக்கிறேன். இந்த மணிவேளைவரை நான் தவறு செய்து இருக்கிறேன் ?.. இப்போதும் பிதாவே, நீர் உம்முடைய ஊழியக்காரனை மன்னியும்...... மேலும் இந்த நாள் முதல், எனக்குத் தெரிந்த மட்டும் நான்?.. மேலும் இன்று. ?..நான் எல்லாவற்றையும் ஜெபவரிசையில் வைக்கமுடியுமா என்று பார்க்கிறேன். எல்லாமுமே அற்புத வரிசையாய் உள்ளது. மேலும் நாங்கள் உம்மிடம் கூறினோம் என்பதைவிட வேண்டிக்கொண்டோம். நீர் எல்லோரையும் இங்கு கொண்டுவந்து அவர்களுக்கு சுகம் அளியும். அப்போது தொடர்ந்து செல்வேன். அற்புத வரிசையில்லாமல் வேறு எதுவுமேயில்லை, நீர் அந்த ஜனங்களை சுகப்படுத் தவில்லை யென்றால், ஜெபவரிசையில் நீர் அவர்களைக் கடந்து போகச் செய்து, அவர்கள் விசுவாசிக் கும்படியாக, நீர் சுகமாக்கப் போகிறீர். அப்போது அது ஒரு சாட்சியாகும். இப்போது தேவனுடைய தூதன் என்னிடம், அற்புதம் நிகழாமல் அவர்கள் விசுவாசிக் கமாட்டார்கள் என்று சொன்னார், அது கடந்து போகக்கூடும் என்று. உம்முடைய வார்த்தைகள் நிரூபிக்கப்பட்டு விட்டன. சர்வ வல்லமையுள்ள தேவனே, என்னுடைய முட்டாள்தனத் துக்காக என்னை மன்னியும். இப்பொழுது, நீர் என்னோடு இருப்பீர் என்றும் எனக்கு இங்கிருந்து செல்லும் பயணத்தின்போது உதவி செய்வீர் என்றும் நான் உம்மிடம் ஜெபிக்கிறேன். இந்த மணிநேரம் முதல் பிதாவே, உம்முடைய ஆவியானவர் வழிநடத் துகிறவிதம் மாத்திரம் நான் போவேன், என்னை மன்னியும் தேவனே, இந்த பிற்பகலிலே இந்தக் கட்டிடத்தை விட்டு நான் வெளியேறிச் செல்லும்போது எனக்கு உதவி செய்யும். ஆயிரக்கணக்கான அல்லது நூற்றுக்கணக்கான இந்த ஜனங்கள் எல்லாருக்கும் முன்பதாக, நீர் இங்கு இருக்கிறீர் என்றும் உம்முடைய வார்த்தையை நிரூபித்திருக்கிறீர் என்றும் சாட்சியாக இந்த நாளில் செய்திருக்கிறீர். இதை அங்கீகரியும் பிதாவே, ஒரு மகத்தான பெரிய கூட்டமாக எதிர் காலத்தில் அல்லது கடந்த காலத்தில் நடந்தது போல அடுத்த ஞாயிறும் கொண்டுவரும் என்பதை குறிப்பிட்டுக் கூறுகிறேன். மேலும் பிதாவே, உம்முடைய மேலான நாமம் மகிமைப்படுவதாக, இதை இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம், ஆமென். 51இந்தக் கூட்டத்தில் என்னுடைய பார்வையாளர்களில் எத்தனை பேர் நான் செய்கிறதை சரியாகச் செய்கிறேன் என்று நினைக்கிறீர்கள் என தெரிந்து கொள்ள விரும்புகிறேன். இங்கே அதுதான் நடக்கிறது. முதல் வரிசையை அடைய முயற்சிக்கும் வகையில் தள்ளுமுள்ளு நடக்கிறது, அது சரியா? தள்ளுமுள்ளு... எல்லோரும் முயற்சிக்கிறார்கள்..? இந்த நேரம் முதல், தேவன் என்னுடைய உபகாரியாக இருக்கிறார். நான் அதே வரிசையை வைக்கிறேன். அதை இப்போது நான் இருப்பது போல், ஒரு ஒழுங்கில் கொண்டு வருகிறேன். எழுந்து நின்று ஜனங்களுக்காக ஜெபிக்கும்போது, அவர்கள் என்னை விசுவாசிக்கத்தான் வேண்டும். அவர்களுக்கு அப்படியே கிடைத்துவிட்டது, அதனால் நம்பமாட் டார்கள். ஏன் ஸ்திரீகள் திரும்பி வந்து என்னிடம், “எனக்காக ஜெபிக்க வாய்ப்பு கொடுக்கப்படவில்லை”, என்கிறார்கள். அவர்கள் வரிசையி னூடாகச் சென்றார்கள். அங்கே எந்த ஒரு அற்புதமும் நடக்க வில்லை. நூற்றுக்கணக்கான கடிதங்கள் என்னுடைய செயலாளரிடம் வந்து குவிந்துள்ளன. அதில், “அவர்கள் எனக்காக ஜெபிக்கக் கூடவில்லை , நான் முதல் வரிசையில் சென்றேன்” என கூறப் பட்டுள்ளது. நீங்கள் விசுவாசிக்கவே வேண்டும். நண்பர்களே, தேவனுடைய வார்த்தையில் அவரை ஏற்றுக்கொள்ளுங்கள். இப்போது, இந்த வாரத்திற்கும், அடுத்த ஞாயிற்றுக் கிழமைக்கும் எனக்காக ஜெபிப்பீர்களா? நான் முன்பதாக வந்து கர்த்தர் தம்முடைய பிள்ளைகளைச் சுகமாக்குவதைக் காணலாம். தேவன் உங்களை ஆசீர்வதிப்பார்...